அரசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அரசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், அக்டோபர் 03, 2017

மக்களும் இன்றைய அரசியலும் ...

மக்கள் ரொம்பவே மாறி விட்டார்கள் என்றும், இன்றைய அரசியலில் நடிகர்களுக்கு மக்களின் ஆதரவு கிடையாது என்றும் கேள்வி படுகிறோம். உதாரணம், ஜல்லிக்கட்டு, நெடுவாசல் போராட்டங்களில் நடிகர்களின் பங்களிப்பு இல்லவே இல்லை என்று கண்டோம். அஜித், விஜய் என்று தீவிரமான ரசிகர்கள் இருந்தாலும் அன்றாட  பிரச்சனைகளுக்கு நடிகர்களை எதிர்நோக்கி மக்கள்  இல்லை என்று சொல்கிறார்கள்.  இங்கு  தான் ஒரு முரண்பாடு தெரிகிறது.  

Image result for தமிழ் நாட்டு மக்கள் அரசியல்Image result for அரசியலில் சினிமாக்காரர்கள்

நடிகர்களுக்கு அரசியலில் ஆதரவு கிடையாது... சரி...  இப்போது இருக்கும் அரசியல்வாதிகளும் ஒருவர் பாக்கி இல்லாமல் யாரும் சுத்தமானவர் கிடையாது.  அப்படியானால் யாரை தான் மக்கள் ஆதரிப்பார்கள்.  புதிதாய் ஒருவர் முளைப்பார் என்று காத்திருப்பார்களா ?  சகாயம் போன்றவர்கள் அஞ்சுவதிலும் நியாயம் இருக்கிறது.  யோசித்து பாருங்கள் . தினம் இரண்டு மிரட்டல் போன் கால் வந்தால் எப்படி இருக்கும்.. அப்படி என்றால் மக்கள் விரும்பும் படித்த நேர்மையான மனிதர் யார் அரசியலுக்கு வரக்கூடும்??

எனக்கு தெரிந்த ஒருவர் இருக்கிறார்.  பள்ளியில் ஒழுங்காக படிக்காமல் படிப்பை பாதியில் கை விட்டார். பிறகு சொந்தமாக கடை வைக்கிறேன் என்று அதையும் சரியாக செய்யாமல் விட்டு விட்டார்.  அடுத்தது என்ன ? இருக்கவே இருக்கிறது வீடு வாடகை புரோக்கர் தொழில், ரியல் எஸ்டேட் தொழில், சீட்டு நடத்தும் தொழில்.. இதையெல்லாம் செய்கிறார்.  ஆனால் இவர்கள் இதை செய்யும் போதே அரசியலில் யாராவது இழுத்து விடுகிறார்கள்.  அவர் விஜயகாந்த் கட்சியில் சேர்ந்தார்.  விஜயகாந்த் எல்லாம் அவருக்கு பிடித்தமான நடிகர் இல்லை. ஆனாலும், கட்சியில் இருந்தால் ஒரு சப்போர்ட் என்பார்.  அங்கு அவருக்கு சரியான கவனிப்பும், வருமானமும் இல்லாததால், அதை விட்டு விட்டு இன்னொரு கட்சியில் சேர்ந்து விட்டார்.  இப்படி தான் பெரும்பாலும் வீணாய் போன இளைஞர்கள் அரசியலில் ஈடு படுகிறார்கள்.  இவர்களை கொண்டது தான் இன்றைய கட்சிகள்.  அப்படியானால் நல்ல மனிதர்கள் யார் தான் அரசியலுக்கு வருவார்கள்? வந்தால் விட்டு விடுவார்களா ?

IT கம்பனிகளில் வேலை செய்பவர்களும், அரசாங்க உத்தியோகத்தில் உள்ளவர்களும், டாக்டர்களும் , வழக்கறீங்கர்களும, engineergalum, ஆசிரியர்களும், தொழிலதிர்பகளும், விளையாட்டு வீரர்களும்  மற்றும் பல கலைஞர்களும் (பாடகர், இசையமைப்பாளர், நடனமாடுவோர்)  யாரவது அரசியலுக்கு வர யோசிப்பார்களா ?? எத்தனை பேர் இவர்களில் இது வரைக்கும் வந்து இருக்கிறார்கள்.  வர மாட்டார்கள்.  ஏனென்றால் இவர்களுக்கு பின்னால் மக்கள் சப்போர்ட் இல்லை.  இவர்களை அரசியல் வாதிகள் சுலபமாக மிரட்டியே ஓட வைத்து விடுவார்கள்.  ஒரு சமயம் ஒரு பத்திரிக்கை ஓட்டெடுப்பு நடத்தியது.  தமிழ் நாட்டில் சிறந்த பத்து விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்கள், எழுத்தாளர்கள் என்று நீண்டது பட்டியல்.  உண்மையிலேயே பத்து பேர் எழுதுவது மிக கடினமாக இருந்தது.  இதை ஏன் சொல்கிறேன் என்றால், சினிமா காரர்களை விட மற்ற துறைகளில் பிரபலமானவர்கள் மிக மிக குறைவு.  சினிமா காரர்கள் பின்னாடி தான் மக்கள் கூட்டம் இருக்கிறது.  மக்கள் சப்போர்ட் இருந்தால் தான் அரசியல் வாதிகள் பயப்படுவார்கள். அதனால் தான் சினிமா காரர்கள் தைரியமாக அரசியலுக்கு வருகிறார்கள்.

எனவே, சினிமாக்காரன் வேண்டாம் என்று சொல்லும் மக்களே, மற்ற துறையில் யாருக்கு பின்னால் அணிவகுப்பீர்கள் என்று சொல்லுங்கள்... ஒருவரும் வரமாட்டார்கள் ... வந்தாலும் இன்றைய அரசியல் சிஸ்டத்தில் அவர்களை தாக்கு பிடிக்க விட மாட்டார்கள்...இப்போதைக்கு நம் தலை எழுத்து சினிமாக்கார்களுடன் தான்.  ரஜினியோ கமலோ நல்ல அரசியல் வாதியாக இருந்தால் ரொம்ப நல்லது...  அது எப்படியோ, தமிழ் நாட்டில் இப்படி தான் என்று இந்த நிலைமை வந்து விட்டது.  மற்ற துறையில் உள்ளவர்களுக்கு பின்னால் மக்கள் அணிதிரளும் வரை சினிமா காரர்களை ஆதரிப்போம்...

புதன், அக்டோபர் 05, 2016

எழுதுவதற்கு எவ்வளவோ இருக்கின்றன!!!

சில மாதங்களாக இந்தியாவிலும், தமிழ் நாட்டிலேயும் நடக்கும் விஷயங்களை கவனித்து வந்ததில் மக்களுக்கு அரசாங்கத்தால் நடத்தப்படும் நிகழ்வுகளின் மேல் கொஞ்சமும் அதிகாரமோ, கட்டுப்பாடோ கிடையாது என்பதை நன்றாக புரிந்து கொண்டேன் இது தான் இத்தனை வருடங்களாக இந்தியாவில் நடக்கிறது என்றாலும், இப்போது தான் சில விஷயங்கள் தெளிவாக புரிகிறது.                                                                                                                                                       தலைப்பில் சொன்னது போல், எழுதுவதற்கு எவ்வளவோ இருக்கின்றன.  ஆனால், அதில், நாட்டு பிரச்சினையை பற்றியும், மக்களின் பிரச்சினையை பற்றியும் எழுதுவதால் என்ன பயன் வந்துவிட போகிறது என்ற அலுப்பு வந்து விடுகிறது.  சென்னை நகரத்தில் புதிது புதிதாக குடியிருப்பு கட்டிடங்கள் எழுப்பி ஏற்கனவே மக்கள் கூட்டத்தால் மூச்சு திணறும் நகரத்தை மேலும் திணறடிக்கிறார்கள் என்று ஒரு வருடம் முன்பு எழுதினேன்.  அதற்கு அப்புறமும் எத்தனையோ குடியிருப்பு ப்ராஜெக்ட் சென்னைக்குள் வந்து விட்டது.  இங்கு பிரச்னையை பற்றிய வருத்தமும் கோபமும் எதனை பேரிடம் இருக்கும் என்று தெரியவில்லை.   காலையில் சாலையில் செல்லும் போது ஏற்படும் வாகன போக்குவரத்து நெருக்கடியும், விபத்துக்களும், மழை பெய்தால் ஏற்படும் வெள்ளமும்  சென்னையை விட்டு நகர வாழ்க்கை புலம் பெயர வேண்டும் என்ற கட்டாயத்தை உணர்த்துகிறது.   ஆனால், அரசாங்கத்தால் இயக்க படும் C M D A போன்ற அலுவலகங்கள் மீது நமக்கு இருக்கும் அதிகாரம் என்ன?  குடியிருப்பு கட்டிடங்கள் கட்டுபவர்களுக்கு எதிராக போராடிய ஒரு சமூக ஆர்வலருக்கு நேர்ந்த கதி எல்லோருக்கும் தெரியும்.                                                                                                                                                                                                                                  ஐந்து வருடங்கள் ஆட்சி செய்யும் முதலமைச்சர் தமிழகத்தின் அணைத்து தொகுதிகளுக்கும் ஒரு முறை சென்று பார்க்கிறாரா?  குறைந்த பட்சம் சென்னையிலாவது அணைத்து பகுதிகளும்  எப்படி இருக்கிறது என்று சென்று பார்க்கிறார்களா?  வெளிநாடு பல சென்றிருக்கும் அரசியல்வாதிகளுக்கு ஏன் நம் நாட்டு அடிப்படை வசதிகளை தரம் படுத்த தோணுவதில்லை.  சாலை வசதி, சாக்கடை வடிகால், மின்சாரம், பொது மக்களுக்கு இடையூறு செய்யும் ரவுடிகள் போன்ற விஷயங்களை பற்றி எந்த முதலமைச்சராவது கவனம் கொண்டிருக்கிறார்களா?   ஆனால் மக்களுக்கு TASMAC வசதி, இலவச செல்போன், லேப்டாப், உணவு இதிலெல்லாம் அதிகம் கவனம் கொண்டிருக்கிறார்கள்.  இது போன்ற முதலமைச்சர்களுக்கும், பிரதம மந்திரிகளுக்கு ஏதாவது உடம்புக்கு வந்துவிட்டால் மக்கள் காட்டும் அனுதாபம் இருக்கிறதே...  மக்களின் இரக்க உணர்ச்சியை கண்டால் புல்லரிக்கிறது.                                                                                                                                                                                                                       இப்போது இருக்கும் காவிரி பிரச்சனை, காஷ்மீர் பிரச்சனை எல்லாம் அரசியல்வாதிகளால் ஊடகங்கள் உதவியோடும், உயர்நீதி மன்றம், உச்சநீதிமன்றம் உதவியோடும் திட்டமிட்டு நன்றாக நடத்த படுகிறது.  பெரும்பாலான மக்களுக்கு இதெல்லாம் வெறும் வாய்ப்பேச்சுக்கும், நேரம் கடத்தவும் பயன் படுகிறது.  சில முட்டாள்கள்  போராட்டம், எதிர்ப்பு என்ற பெயரில் அடி வாங்கியும், உயிரையும் விடுகிறார்கள்.                                                                                                                                                                                                                                                                     2ஜி, க்ரானைட், மணல் தாது கொள்ளைகள், BCCI, ஹரியானா நில விவகாரம், நேஷனல் ஹெரால்ட், Bofors  எல்லாம் பேசி பேசி அலுத்து போன விஷயங்கள்.  இவை எல்லாம் நிலைமைக்கேற்ப அரசியல் வாதிகளால் முன்பே சொன்னது போல் நீதிமன்றங்கள், மற்றும் ஊடகங்கள் உதவியோடும் நடத்த படும் நாடகங்கள்.  மக்கள் பார்த்துவிட்டு போய்க்கொண்டே இருக்க வேண்டும்.  இதில் எல்லாம் தலையிட முடியாது.  தலையிட்டால் தலை இருக்காது.                                                                                                                                                                                                       சினிமா, கதை, கவிதை, இலக்கியம், குடும்ப பிரச்சனைகள், சமையல், விளையாட்டு, அறிவியல், சுற்றுலா, மருத்துவம், பண்டிகை, நடனம், பாட்டு, குழந்தை வளர்ப்பு  என்று ஆஹா ...எழுதுவதற்கு எத்தனை விஷயங்கள்  உள்ளன.  இவை மட்டுமே நம் மக்களை உயிர்ப்போடு வைத்திருப்பவை.  சுஜாதா போன்ற புத்திசாலி எழுத்தாளர்கள் இந்த தலைப்பில் தான் எழுதி வந்தார்கள். ஏனென்றால் நம் நாடு மக்களால் நடத்த படும் நாடல்ல !!!


வியாழன், மே 19, 2016

தேர்தல் முடிவு உணர்த்துவது என்ன?

இந்த தேர்தல் முடிவு ஒரு முக்கியமான விஷயத்தை உணர்த்தி உள்ளது. எத்தனை பேர், எத்தனை ஊடகங்கள், எத்தனை கட்சிகள் இதை கண்டுக் கொண்டுள்ளார்கள்  என்று தெரியவில்லை. அது என்னவென்றால், அ.தி.மு.க, தி.மு.க தவிர மற்ற கட்சிகளால் ஏன் ஜெயிக்க முடியவில்லை என்பதே!!! விஜயகாந்த், அன்புமணி, வை.கோ, சீமான், திருமாவளவன், பி.ஜே.பி யை மக்கள் ஏன் நிராகரித்து விட்டார்கள்?

Image result for periyar anna kamarajImage result for periyar anna kamaraj

திராவிட கட்சி உருவான போதும், தி.மு.க உருவான போதும், பிறகு அ.தி.மு.க உதயமான போதும் அந்த கட்சிகள் கொள்கை ரீதியாக மக்களிடம் ஒருவித பிணைப்பை ஏற்படுத்தி இருந்தன.  ஹிந்தி எதிர்ப்பு, சமுதாய நலம் சார்ந்த பிரசார கூட்டங்கள், சீர்திருத்த நாடகங்கள், சினிமா படங்கள் போன்ற விஷயங்கள் மூலமாக மக்களை தங்கள் கட்சியின் உண்மையான தொண்டர்களாக்கி வைத்திருந்தன.  வெகு நாட்களுக்கு இந்த கொள்கைகள் மூலம்  தங்கள் வோட்டு வங்கியை இவர்கள் தக்க வைத்திருந்தார்கள்.  இந்த உண்மையான தொண்டர்களும் அவர்களுடைய குடும்பமும் எப்போதும் அவர்களுடைய அபிமான கட்சிக்கே ஒட்டு போடுவார்கள்.   ஆனால்  ஒரு கால கட்டத்துக்கு பின், கலைஞர் சர்க்காரியா கமிஷன் ஊழல் வழக்கில் சிக்கிய காலத்துக்கு பின், தி.மு.க வும் , அ.தி.மு.க வும் மெல்ல தங்கள் கொள்கைகளில் இருந்து விலகி பணம் சேர்ப்பதையே முழு நேர கொள்கையாக்கி கொண்டன.  இந்த கொள்கை படி தேர்தலின் போது லட்சம் லட்சமாக செலவு செய்வது.  ஜெயித்த பின் அதையே கோடி கோடியாக அறுவடை செய்வது என்பது தொடர்ந்து வருகிறது.   இன்று வரை இந்த இரண்டு கட்சிகளும் இதைத் தான் செய்து வருகிறது.  மக்களும் வேறு வழியே இல்லாமல் இவற்றுக்கு தான் மாற்றி மாற்றி ஓட்டு போட்டு ஜெயிக்க வைக்கிறார்கள்.

Image result for vijayakanth vaiko anbumani seeman thirumavalavanImage result for seemanImage result for anbumani ramadoss

இதற்கு பிறகு வந்த விஜயகாந்த், அன்புமணி, சீமான், வை.கோ. போன்றோர்கள் எந்த ஒரு கொள்கையும் இல்லாமலும் கட்சி ஆரம்பித்தார்கள்.   ஆனால், முன்பே கெட்டு போய் விட்ட தி.மு.க, அ.தி.மு.க வை பார்த்து பணம் சம்பாதிப்பதை மட்டுமே தங்கள் கொள்கையாக கற்றுக் கொண்டுவிட்டார்கள்.  இவர்களது தேர்தல் அணுகுமுறை தேர்தலின் போது லட்சம் லட்சமாக செலவு செய்வது, பின்பு ஜெயித்தால் அதை சம்பாதித்து கொள்வது. இதை அடைவதற்கு தரம் கெட்டு போய் கூட்டணி வைத்துக்கொள்வார்கள்.  தமிழ் நாட்டுக்கு தொழிற்சாலைகள் கொண்டு வருவது, லோகாயுக்தா கொண்டு வருவது, ஊழலை ஒழிப்பது இவையெல்லாம் இந்த புது கட்சிகளின் கொள்கைகளில் இல்லை.  ஏற்கனவே, தி.மு.க, அ.தி.மு.க வின் இந்த மோசமான கொள்கைகளினால் கடுப்பில் இருக்கும் மக்கள், இதே கொள்கைகளையே புது கட்சிகளும் கடைபிடிப்பதை எப்படி ஒத்துக்கொள்வார்கள்?.

எடுத்த எடுப்பிலேயே, கட்சி  ஆரம்பித்தவுடன் பணம் மட்டுமே குறிகோளாய் அரசியல் பண்ணும் இந்த கட்சிகளுக்கு மக்கள் நல்ல பாடம் புகட்டிவிட்டார்கள்.  ஆனால் இந்த கட்சி தலைவர்களுக்கு, தாங்கள் ஏன் தோற்றோம் என்று தெரியுமோ தெரியாதோ? புதிதாய் உருவாகும் கட்சிகள் தங்கள் கொள்கைகளினால் மக்களை கவர வேண்டும். தமிழகத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல கொள்கை வகுத்து நல்ல பெயர் வாங்க வேண்டும்.  பிறகு இவர்களுக்கு நல்ல வாக்கு வங்கியும், நிரந்திர தொண்டர்களும் கிடைப்பார்கள்.  ஓரளவுக்கு, அரவிந்த் கேஜ்ரிவால் இந்த அணுகுமுறையை கொண்டு வெற்றியும் பெற்று விட்டார். புதிய கட்சிகள் யோசிப்பார்களா? இந்த தேர்தல் முடிவு எனக்கு இதை தான் உணர்த்தியது. கொள்கை இல்லாத கெட்ட எண்ணம் கொண்ட கட்சிகளை மக்கள் தூக்கி எறிந்து விட்டார்கள்.  நல்லதொரு மூன்றாவது கட்சி வந்தால், கொள்கை மாறிய அ.தி.மு.க, தி.மு.க வையும் நிராகரித்து விடுவார்கள்.  அந்த காலமும் வராமல் போகாது!!!

ஞாயிறு, மே 15, 2016

நம் மீது திணிக்க படும் தேர்தல் அராஜகங்கள்

தேர்தல் முடியும் வரை தேர்தல் பற்றிய பதிவுகள் தாங்க... இந்த தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகளின் அராஜகங்களைப் பற்றி யோசிக்கையில் முதல் அராஜகமாய் மனதில் தோன்றுவது இந்த இரு கட்சிகளுக்கே மாற்றி மாற்றி ஓட்டு போட வேண்டி இருக்கிறதே அது தான்.  மூன்றாவது மாற்றாக ஒரு நல்ல கட்சி இல்லாதது  நம் இப்போதைய தலைவிதி.  

இரண்டாவது அராஜகம் பணம் கொடுத்து ஓட்டு  வாங்கி விடலாம் என்று கட்சிகள் நினைப்பது.  பணம் கொடுப்பதை  நடைமுறையே படுத்தி விட்டார்கள்.  570 கோடி பணத்தை திருப்பூர் அருகே கைப்பற்றி அதை ஏதோ வங்கி பணம் என்று உட்டாலக்கடி செய்துக் கொண்டிருக்கிறார்கள்.  இரவு கரண்ட் கட் ஆகும்.  அப்போது உங்கள் வீட்டு வாசல் அருகே பூனை மியாவ் மியாவ் என்று   கத்தும்.  உடனே கேட் அருகே வந்து பணத்தை வாங்கி கொள்ளுங்கள் போன்ற பல செட் அப் உண்டு.   

மூன்றாவது அராஜகம் இலவசங்களை அள்ளி விடுறது!!! இலவசங்கள் கொடுப்பதற்கு எங்கிருந்து பணம் வரும் என்ற கேள்விக்கெல்லாம் பதில் இன்னும் யோசிக்கவில்லை.  பிளஸ் 2 பரீட்சைக்கு வினாத்தாள் தயாரிப்பது மாதிரி தேர்தல் அறிக்கையில் யோசித்து யோசித்து மண்டையை பிய்த்து Grinder கொடுக்கலாமா? இல்லை Fridge கொடுக்கலாமா, அவன் என்ன கொடுக்கிறான் நாம் என்ன கொடுக்கலாம் என்று போட்டா போட்டி போடுகிறார்கள்.  முதல்ல எல்லோருக்கும் வேலை வாய்ப்பை கொடுங்கப்பா!!

நான்காவது அராஜகம் நடக்க சாத்தியம் இல்லாத அல்லது கடினமான வாக்குறிதிகளை கொடுப்பது.  லோகாயுக்தா அமைப்போம், நதிகளை இணைப்போம், கூவத்தை சுத்தப்படுத்துவோம்,  ஏரிகளை தூர் வாருவோம், திருச்சி, மதுரை போன்ற ஊர்களில் மெட்ரோ ரயில் விடுவோம் என்று வாயிலேயே ரயில் விடுவது.  பிறகு வெற்றி பெற்று விட்டால் இந்த திட்டங்களுக்கு பெரிய நிதி ஒதுக்கி அதை ஸ்வாகா பண்ணிவிடுவது.  பின் இந்த திட்டங்கள் அடுத்த தேர்தல் அறிக்கையில் தொடரும்.  எப்படின்னா, டிவி சீரியலுக்கு கூட முற்றும் உண்டு.  ஆனால் இந்த திட்டங்களுக்கு எல்லாம் முடிவே இல்லை.

ஐந்தாவது அராஜகம் கடந்த ஐந்து வருடங்கள் தொகுதியில் தலையையே காட்டாமல் இப்போது தேர்தல் நேரத்தில் மட்டும் தலைக்காட்டுவது.    பழைய படங்களில் வருவது மாதிரி முகத்தில் மரு வைத்து போனாலும் மக்கள் அடையாளம் கண்டு பின்னி எடுத்துவிடுவார்கள் என்று இப்போது பயந்து தொகுதி மாற்றி நிற்கிறார்கள்.  

இப்படி அராஜகங்களை அடுக்கி கொண்டே போகலாம். இதையெல்லாம் நாம் சும்மா ரஸ்க்கு சாப்பிடுவதை போன்று எடுத்துக்கொண்டு நம் தின வேலையை தொடர்ந்து வருகிறோம். இவற்றை எதிர்த்தால் நம்மை அரசாங்கம் நாம் கேள்வியே படாத வகைகளில் துன்புறுத்தும்.  அது ஒரு பெரிய அராஜகம்.  சரி! நாம் இந்த முறை ஓட்டு போட்டு இந்த அராஜகங்களை ஜெயிக்கும் கட்சி செய்ய மாட்டார்கள் என்று நம்புவோமாக!!
நம்பிக்கை ஒன்று தான் இப்போது நம்மிடம் உள்ள ஒரே நல்ல விஷயம்.

 

சனி, மே 14, 2016

தேர்தல் நிமிடங்கள்!!!

தேர்தலுக்கு இன்னும் ஒரு நாள் தான் இருக்கிறது.  இந்நேரம் மக்கள் தங்கள் மனதில் யாருக்கு ஒட்டு போட வேண்டுமென்று முடிவே செய்து இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.  இன்று முழுவதும்  கட்சி தொண்டர்கள் சைக்கிளில் ஒரு கொடியை கட்டிக்கொண்டு அங்கிட்டும் இங்கிட்டுமாய் தாறுமாறாய் அலைந்து கொண்டிருந்தார்கள்.  காலையிலேயே இரண்டு ஆட்டோ எங்கள் வீட்டு வாசலில் நின்று கொண்டு கட்சி பாடல்களை அலற விட்டுக் கொண்டிருந்தார்கள்.  எல்லாம் தேவா போட்ட உல்ட்டா பாடல்களின் உல்ட்டா.  வீட்டு காம்பௌண்ட் சுவருக்குள் கலர் கலராய் விளம்பர பேப்பர்கள் வந்து விழுந்தன.  பொறுக்கி எடுத்து பழைய பேப்பர் கட்டுக்குள் வைத்து விட்டோம்.  சில பேப்பர்களில் எங்கள் பேருக்கே கடிதம் போன்று அச்சிடப்பட்டிருந்ததை கண்டு கொஞ்சம் திகிலாய் வேறு இருந்தது.



இவ்வளவு கூத்திலும் எங்கள் சாலையில் எந்த வேட்பாளரும் ஓட்டு கேட்க வந்ததாய் தெரியவில்லை. ஜெயித்து விடுவோம் என்ற Confidence லெவல் எக்குத்தப்பாய் இருக்கிறது போல... அதே போல் பணம் கொடுப்பது மாதிரியும் தெரிய வில்லை. இது வரை வந்த கருத்து கணிப்பையெல்லாம் பார்த்தால் எந்த கருத்து கணிப்பு சரியான கருத்து கணிப்பு என்று இன்னொரு கருத்து கணிப்பு வைக்க வேண்டும் போலிருக்கிறது.  அட போங்கப்பா நீங்களும் உங்கள் கருத்து கணிப்புமென்று இறுதியில் இவை எல்லாம் போரடித்து விட்டது.  இன்றைய தினம் பொதுஜனம் என்ன செய்து கொண்டு இருந்தது என்றறிய போன் செய்து நண்பர்களை விசாரிக்கையில் பெரும்பாலும் எல்லோரும் சினிமாவுக்கு போய் இருந்தார்கள்.  தேர்தல் புண்ணியத்தில் மூன்று நாள் லீவ் கிடைத்ததில் அப்படி ஒரு நிம்மதி. எல்லோரும் ஆள் ஆளுக்கு இந்த கட்சிக்கு ஓட்டு போடு இவங்களுக்கு போடாதே என்று உபதேசம் செய்ய நானும் பதில் உபதேசம் செய்து வைத்தேன்.  நான் யாருக்கு ஓட்டு போடுவது என்று இன்னும் முடிவு செய்ய வில்லை.  3G ஊழலும், சென்னை வெள்ளமும் மறக்க வில்லை. யார் ஆட்சிக்கு வந்தாலும் சாலையின் குண்டு குழிகளும், குப்பைகளும் அப்படியே தான் இருக்கிறது. இதில் யார் வந்தால் என்ன?  ஆனாலும் தமிழக மக்கள் தங்கள் பரிதாபத்துக்குரிய தலைவிதியை நன்றாக உணர்ந்து வைத்துள்ளனர்.  அதன்படி மாறி மாறி ஆட்சியை தேர்ந்தெடுப்பார்கள் என்பது என் ஊகம்.

பல வருடங்களுக்கு முன்பெல்லாம்,  டி.வியில் ஓட்டு எண்ணிக்கையின் போது நிறைய படங்கள் போடுவார்கள்.  நடு நடுவே ஓட்டு எண்ணிக்கை விபரம் சொல்லுவார்கள்.  மிகவும் விறு விறுப்பாகவும் சந்தோஷமாகவும் இருக்கும்.   சில பெரியவர்கள் அலுவலகத்துக்கு லீவ் கூட  போட்டு விடுவார்கள்.   ஆனால் இப்போது காலை பதினோரு மணியளவிலேயே முடிவு தெரிந்து விடுவதால் விறுவிறுப்பு மிஸ்ஸிங்.  ரஜினி, கமல், அஜித், விஜய் இவர்கள் எல்லாம் அமைதியாக வரிசையில் நின்று ஓட்டு போடுவதை  பத்திரிக்கைகள்  அடுத்த நாள் படம் போட, அதை பார்த்து அவர்களின் ரசிகர்கள் அளவற்ற மகிழ்ச்சி கொள்வார்கள்.  தேர்தல் முடிவுக்கு பின்  அம்மாவின் சொத்து குவிப்பு வழக்கு என்னாகும் என்ற விறுவிறுப்பு எங்கள் ஆபீஸ் அரட்டை கச்சேரியில் தொற்றிக் கொள்ளும்.  இப்படியே ஊழலும், வழக்குமாய் பேசி பேசி அடுத்த தேர்தல் வந்து விடும்.  அம்மாவும், ஐயாக்களும் மட்டும் மாறவே மாட்டார்கள்.


  


சனி, ஏப்ரல் 23, 2016

தேர்தல் 2016- பந்தயம் ஜோர்!!

இந்த முறை தேர்தலில்   உண்மையாகவே அனல் பறக்கிறது.  சூரியனின் உக்கிரத்தால் வெப்பம் இப்பவே 41 deg C ஆக கொதிக்கிறது.  தேர்தல் தினத்தில் (மே 16) எவ்வளவு செல்சியஸ் சென்று ஓட்டு சதவீதத்தை பாதிக்க போகிறதோ தெரியவில்லை.  பிரச்சாரத்தில் தலைவர்கள் சூட்டை கிளப்புகிறார்களோ இல்லையோ, சூரியன் கிளப்பும் சூட்டில் நாலைந்து பேர் இறந்து போனது பரிதாபம்.  தமிழா! பிரியாணி பொட்டலத்துக்கும், குவாட்டருக்கும் சொச்ச பணத்துக்கும் இப்படி வெயிலில் மாண்டு போனாயே...


ஒவ்வொரு தேர்தலுக்கும் வாக்குறுதிகளில் இலவசங்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே வருகிறது.  மிக்சி, Fan, Grinder, கணினி என்று ஆரம்பித்து இப்போது  fridge, வாஷிங் மெஷின் என்று போய்க்கொண்டிருக்கிறது.  ஒரு ரூபாய் வாங்கினாலும், அதற்காக நன்றிக்கடன் பட்டவர்கள் நம் மக்கள் என்பதை அரசியல் வாதிகள் புரிந்து வைத்துள்ளனர்.   ஒரு கட்டத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால்,  உங்களுக்கு மாத சம்பளமே இலவசமாக கொடுப்போம் என்று சொன்னாலும் சொல்லுவார்கள்.  மற்ற மாநிலங்களில் இருந்தெல்லாம் அரசியல் தலைவர்கள் தமிழ் நாட்டில் நடக்கும் இலவச திட்டங்களை பார்த்து கற்றுக் கொண்டு போகிறார்களாம்.  நாட்டை கெடுப்பதில் தமிழ்நாடு எப்படி முன்னோடியாக இருக்கிறது பாருங்கள்!! தேர்தல் வாக்குறுதி என்றால் எவ்வளவு பெரிய விஷயம் என்பது போய், அதை காமெடி அறிக்கை ஆக்கி விட்டார்கள்.  

கையில் கேமரா சகிதம் போலீஸ்காரர்கள் அங்காங்கே வண்டிகளை நிறுத்தி சோதனை செய்கிறார்கள்.  காருக்குள் என் மனைவியும், மகளும் இருந்தும் கூட என் வண்டி பலமுறை நிறுத்தி சோதனை செய்யப் பட்டது.  என்னடா இப்படி தொல்லை கொடுக்கிறார்கள் என்று அலுத்துக்கொள்ளும் போது, இன்று கரூர் மாவட்டத்தில் நிறைய இடங்களில் பதுக்கி வைத்திருந்த பணத்தை கைப்பற்றியிருக்கிறார்கள் என்று தெரிந்த போது, தன் கடமையை தான் அவர்கள் செய்கிறார்கள் என்று புரிந்தது.  ஆனால் பிரச்சாரம் என்ற பெயரில் பொது சாலைகளை அடைத்து மேடை போட்டு வண்டிகளை அந்த சாலையில் விடாமல் வேறு சாலைகளில் திருப்பி விட்டு பொது மக்களுக்கு இடையூறு செய்கிறார்கள்.  இதற்கெல்லாம் அதிகாரம் இவர்களுக்கு எப்படி கிடைக்கிறது என்று தெரிய வில்லை. 

Image result for tamil nadu election 2016 

இந்த முறை பிரதான  இரண்டு கட்சிகளை தவிரவும் பிற கட்சி கூட்டணிகள் இருப்பது ஒரு ஆறுதலும், விறுவிறுப்பும் கூட.  சில கட்சி தலைவர்களுக்கு இந்த தேர்தல் கடைசி தேர்தலாகவும், வரும் ஆண்டுகளில் பெரிய அரசியல் மாற்றங்கள் வர வழி செய்யும் தேர்தலாகவும் இது இருக்கக் கூடும். இந்த தேர்தலில் வெற்றி பெரும் கட்சியும், இது வரை இருக்கும் அரசியல் செயல்பாடுகளில் நிறைய மாற்றங்களை செய்து மக்களுக்கு பதில் சொல்லும் கட்டாயத்தில் இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.  தேர்தலில் நிற்கும் கட்சிகளும், அவர்களின் பிரச்சார முறைகளும், ஓட்டுக்கு பணம் கொடுப்பதும், இலவச வாக்குறுதிகளும் எதுவும் இந்த தேர்தலில் மாற வில்லை.  ஆனால் மக்கள் தங்களுக்குள் எழுப்பும் கேள்விகளும், அரசியல் தலைவர்களை ஆழ்ந்து பார்ப்பதிலும், நையாண்டி செய்வதிலும் நல்ல மாற்றங்கள் தெரிகிறது.  இந்த தேர்தலின் முடிவிலும் அதன் தொடர்ச்சியான ஆட்சியிலும் நான் நம்பிக்கை கொண்டிருக்காவிட்டாலும், அடுத்த தேர்தல் தமிழர்களின் தலையெழுத்தை மாற்றும் தேர்தலாக இருக்கும் என்பதில் எனக்கு மிக்க நம்பிக்கை உண்டு.  

இருந்தும், அம்மாவின் வேட்பாளர் மாற்றங்களும், கலைஞரின் குற்றசாட்டுகளும், விஜயகாந்தின் புரியாத பேச்சும், வைகோவின் கூட்டணிகளும், ராமதாஸின் தேர்தல் அணுகுமுறைகளும், பா.ஜ.க வின் பரிதவித்தலும் இவை எல்லாவற்றிக்கும் மேலாக whatsapp, facebook இவற்றில் வரும் memes மற்றும் தொலைக்காட்சி சேனல்களில் வரும் விவாதங்களும் இந்த தேர்தலை விறுவிறுப்பான தேர்தலாக்கி இருக்கிறது.  தேர்தல்  2016 - பந்தயம்   ஜோர்!!! 

ஞாயிறு, ஏப்ரல் 17, 2016

Flop ஆகி போன தேர்தல் அறிக்கைகள்...

தேர்தல் அறிக்கை என்பதை எல்லாம் மக்கள் சீரியஸ் ஆக எடுத்துக் கொள்வதில்லை என்பது கட்சிகளுக்கு நன்றாக தெரிந்து விட்டது.  போன தேர்தலில் சொன்னதை எல்லாம் மக்கள் ஞாபகம் வைத்திருக்கிறார்களா என்ன?  அதனால் எதை வேண்டுமானாலும் அடித்து விடலாம் என்ற தைரியம். வானத்தில் உள்ள நட்சத்திரத்தை பிடுங்கி கொண்டு வருவோம், இமய மலையை தமிழ் நாட்டுடன் சேர்த்து விடுவோம் என்று இஷ்டத்துக்கு கதை விடறது...  கச்ச தீவை மீட்பது, தமிழ் மொழியை மத்தியில் ஆட்சி மொழியாக கொண்டு வருவது எல்லாம் இப்படி தான்.  நடு நடுல இலவசம் இலவசம்னு சிலதை போட்டுக்கணும்.  

ஆனால் மக்களாகிய நாம் செய்ய வேண்டியது... நம் தொகுதியில் போன முறை வெற்றி பெற்றவர் கடந்த தேர்தல் அறிக்கையில் சொன்னதையெல்லாம் செய்து விட்டாரா என்று பார்ப்பது அவசியம்.  அப்படி செய்யவில்லை என்றால் அந்த கட்சியை தவிர்ப்பது நல்லது.  

இப்படி ஒரு தேர்தல் அறிக்கையை பார்க்க வேண்டும் என்று எனக்கு ஒரு ஆசை;

-  அணைத்து திட்டங்களையும் இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை மறுஆய்வு  
   செய்யவோம்.  அதில் மக்களின்  கருத்துக்களும் இடம் பெற செய்வோம்.

-  தூய்மை இந்தியா திட்டத்திற்கு மத்திய அரசாங்கத்துடன் சேர்ந்து 
   ஒத்துழைப்போம்.

-  சென்னை போன்ற மக்கள் அடர்த்தி உள்ள நகரங்களை விரிவு 
   படுத்துவோம்.  புதிய அடுக்கு மாடி கட்டிடங்களை இங்கே கட்ட அனுமதி 
   கொடுக்க மாட்டோம்.

-  கல்வி தரத்தை உயர்த்துவோம்.  தொழிற்முறை கல்விக்கு முக்கியத்துவம் 
   கொடுப்போம்.

-  புதிய மின் நிலையங்களை தொடங்கி மின்சார தட்டுப்பாடை நீக்குவோம்.

-  மதுவிற்கு எதிரான பிரசாரத்தை தீவர படுத்துவோம்.  மது கடைகளை 
   திறந்து வைத்திருக்கும் நேரத்தை குறைப்போம்.

-  எந்த பொதுப்பணி துறையின் வேலையானாலும் அதை தரத்துடன், உரிய 
   காலத்தில் முடிப்போம். ப்ராஜெக்ட் முடியும்வரை அதன் தற்போதைய 
   நிலையை  மக்களுக்கு தெரியப் படுத்துவோம்.  

- அரசாங்க மருத்துவமனைகளின் தரத்தை உயர்த்துவோம்.

இப்படி எத்தனையோ... படிப்படியாக செய்வோம்  என்றால் கூட நல்லது.  ஆனால் இங்கே என்ன நடக்கிறது.  தேர்தல் அறிக்கையை வைத்து தேர்தல் நடப்பதில்லை.  ஒரு கட்சியை பற்றி  மற்ற கட்சி மோசமான வார்த்தைகளால் வசை பாடுவது, ஓட்டுக்கு பணம் கொடுப்பது மட்டுமே நடக்கிறது. இவ்வாறு நடப்பதற்கு மக்களாகிய நாம் இடம் கொடுத்து விட்டோமா என்று தோன்றுகிறது.  கொஞ்சம் யோசிப்போம் மக்களே!!!








ஞாயிறு, மார்ச் 13, 2016

வை ராஜா வை - பணத்தை வை

உங்களால் எவ்வளவு செலவு  செய்ய முடியும்? நீ எவ்வளவு பணம் கொடுப்ப!!இப்படி வேட்பாளர் தேர்வுக்கு நேர்காணல் செய்து தேர்தல் செலவுக்கு பணம் வாங்குகிறார்கள்.  கொடுப்பவர்களும் லட்சங்களிலும், கோடிகளிலும் கொட்டிக் கொடுக்கிறார்கள். நமக்கெல்லாம் ஒரு கோடி என்றாலே வாழ்க்கையின் ஒரு கோடியில் இருக்கிறது அந்த தொகை.  எப்படி கட்டுகிறார்கள் அவ்வளவு பெரிய தொகை? எப்படியோ கட்டுகிறார்கள்.   டாக்டர் சீட்டுக்கும், இன்னும் பிற சேர்க்கைக்கும் லட்ச லட்சமாக கட்ட வில்லையா?


அரசியல் தொழில் செய்ய தேவைப்படும் முதலீடு இது.  இல்லை இல்லை. அரசியல் சூதாட்டதில் வைக்கப்படும் பணம் இது.  பணத்தை போட்டு பணத்தை எடுப்பது.   ஒரு முறை ரஜினிகாந்த் தனது உடல்நிலை மோசமாகி பிறகு  தேறி வந்தவுடன் தன ரசிகர்களை சந்தித்தார்.  எல்லா ரசிகர்களுக்கும் மிகவும் ஆர்வம்.  தலைவர் அரசியலுக்கு வந்து விட மாட்டாரா என்று.   ஒரு ரசிகர் மன்ற தலைவர் கேட்டார்.  தலைவா, நீங்க அரசியலுக்கு வந்தா எங்களுக்கு தேர்தல் செலவு செய்ய நிதி கொடுப்பீங்களா என்று.  அதற்கு ரஜினியோ அரசியல் வேறு பணம்  வேறு.  அரசியலில் பணத்தை கலக்க கூடாது, அரசியல் என்றால் மக்கள் தொண்டு  என்று சொல்லிவிட்டார்.  பணம் கலக்காமல் அரசியலா? அந்த ரசிகருக்கு தலை சுற்றியிருக்கும்.  இப்படி தான் விஜய்காந்திற்கும், ஜாதி சார்ந்த பல கட்சி தலைவர்களுக்கும் நிறைய தொண்டர்கள் இருக்கிறார்கள். பணத்தை குறி வைத்து காத்துக்கொண்டிருக்கும் இந்த தொண்டர்கள் தான் நாளைய அரசியல் தலைவர்கள்.  நாடு நல்லா விளங்கும்.

இப்படி ஒரு கூட்டம் சூதாட்டம் விளையாடும் போது நாம் அவர்களிடம் போய் மின்சாரம் வேண்டும், ரோடு வேண்டும், அது வேண்டும், இது வேண்டும் என்று கேட்டால் எப்படிங்க? விளையாட்டை பார்த்துட்டு போய் கிட்டே இருங்க.

வை ராஜா வை. பணத்தை எடு ராஜா எடு!!!






சனி, ஜனவரி 30, 2016

பழ. கருப்பையா!! என்ன இப்படி சொல்லிட்டீங்க!!!

பழ. கருப்பையாவின் பேட்டியை படித்திருப்பீர்கள்.  படித்ததும் என்ன நினைத்துக்கொண்டீர்கள்? இத்தனை  வளைந்த முதுகுகள் மத்தியில் தோள் நிமிர்ந்த  அ.தி.மு.க காரர்.  ஆளுங்கட்சியில் இருந்து கொண்டே மேலிடத்தை எதிர்த்து பேசியவர்.  நெஞ்சத்தில் பட்டதை தைரியமாக சொன்னவர்.  எனக்கு இவரைப் பற்றி எழுத தோன்றியது.   அதுவும் இவர் சொன்ன சில கருத்துக்கள் எல்லோர் மனதிலும் குமுறிக் கொண்டிருந்தது தான்.  




அரசியல் என்றால் பணத்தை கொள்ளை அடிப்பது.  ஒவ்வொரு கவுன்சிலருக்கும் நான்கு வீடுகள்.  மூன்று கீப்கள்.  இரண்டு கார்கள். கவுன்சிலரை பார்க்க வேண்டிய விதத்தில் பார்க்காவிட்டால் நாம் வீட்டில் கிரகப்பிரேவசம் நடத்த முடியாது.  கவுன்சிலரே இப்படி என்றால் எம்.எல்.ஏ க்கள் எப்படி இருப்பார்கள். மந்திரிகள் எப்படி இருப்பார்கள்.  அதிகாரிகளும் கிடைத்த வரை கொள்ளை அடிக்கிறார்கள்.  சட்ட விரோத நபர்களுக்கு மாவட்டச் செயலாளர்கள், எம்.பி -க்கள், அமைச்சர்கள், அதிகாரிகள் என எல்லோரும் துணை நிற்கிறார்கள்.

இப்படியெல்லாம் பொங்கி இருக்கிறார்.  மேலும், தன் தொகுதியில் எவ்வளவோ நல்லது செய்ய முயற்சி செய்ததாகவும் எதுவுமே நடக்க வில்லை என்றும் பேட்டி கொடுத்திருக்கிறார்.  இவர் பேசியது எல்லாம் யாருக்கும் தெரியாதது இல்லை. புதுசா என்னய்யா பேசி இருக்காருன்னு தோணலாம்.  ஆனால், இப்போது இருக்கும் ஆளுங்கட்சி அரசியல் அடக்குமுறைகளில் இவ்வளவு பேசுவதே பெருசுங்க.   யாரும் அவ்வளவு எளிதாக தலைமையை விமர்சிக்காத போது துணிந்து தன கருத்துக்களை முன் வைத்துள்ளார்.  அது தான் முக்கியம்.  இவ்வளவு தைரியம் யாருக்கு வரும்.  அதனால் தான்,  இப்போது இவர் வீட்டை தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள்.

யார் இந்த பழ. கருப்பையா?

-  காரைக்குடிகாரர்.  எழுத்தாளர். பேச்சாளர்.  சினிமா தயாரிப்பாளர். காங்கிரஸில் இருந்து அ.தி.மு.க வில் சேர்ந்தவர்.

- சென்னை துறைமுகம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு           எம்.எல்.ஏ வாக இருப்பவர்.

- தமிழக கோயில்களில் தமிழிலும் அர்ச்சனை செய்ய வேண்டும் என்று உயர்நீதி மன்றத்தில் கேஸ் போட்டவர்.

-   அரசியல் மற்றும் சமுதாயம் சார்ந்த புத்தகங்கள் எழுதியிருக்கிறார்.

-  நான் தமிழன்.  என் மதம் சைவமோ வைணவமோ இருக்கலாம்.  ஆனால் ஹிந்து அல்ல என்று  சொன்னவர். 

ஆனால் இந்த தைரியத்துக்கு பின்னால், வேறு மாதிரியும் யோசிக்க வேண்டியிருக்கிறது.

பழ. கருப்பையா அவர்களே!! எல்லாம் சரி.  ஐந்து வருடங்கள் அ.தி.மு.க வில் எம்.எல்.ஏ வாக இருந்து விட்டு இப்போது ஐந்தாவது வருடம் தான் உங்களுக்கு நியாங்கள் புரிய வருகிறதோ ?

இதற்கு முன் உங்களுக்கு அரசியலை பற்றி ஒன்றும் தெரியாதா?  கவுன்சிலர்கள், மந்திரிகள்  என்றால் எப்படி என்று தெரியாதா?  இத்தனை வருடங்கள் ஏன்  ஊமையாக நடித்தீர்கள்.  தேர்தல் வருகிறது என்பதால் கட்சி மாற சமயம் பார்கிறீர்களோ?

எப்படி இருந்தாலும், நியாய வாதங்களும், போராட்டங்களும் மௌனித்து போன இந்த காலத்தில் உங்கள் குரல் சில மனங்களில் சிந்தனை விதையை விதைத்திருக்கும். அட! துக்ளக் விழாவில் அவர் பேச்சை கேட்ட நாலு பேர், ஆனந்த விகடனில் அவர் பேட்டியை படிச்ச நாலு பேர் யோசிக்க மாட்டாங்களா??



புதன், ஜனவரி 06, 2016

தலைவன் வருகிறான் காத்திருப்போம்

 2016!!  புது ஆண்டு பிறந்து விட்டது.  தமிழனின் பழைய கனவுகள் எல்லாம் அப்படியே புது ஆண்டிலேயும் தொடர்ந்து பயணிக்கின்றன.  2011 இல் கொடுத்த வாக்குறுதிகள்  இப்போதும் சாகா வரம் பெற்று இருகின்றன. தமிழனை செய்வீர்களா? செய்வீர்களா? என்று கேட்ட போது செய்தான்.  மறப்பீர்களா? மறப்பீர்களா? என்ற போது மறந்தான்.  மன்னித்து விடுங்கள் என்ற போது மன்னித்தும் விட்டான்.  அரசியல் வாதிகளே!! நீங்கள் எதை செய்தாலும் பொறுத்துக்கொள்ளும் தமிழன் இனியும் பொறுப்பானா? பொறுப்பான் என்றே தோன்றுகிறது.  பொறுத்து கொள்ளத் தான் வேண்டும். வேறு வழி இருக்கிறதா இந்தியாவில்? 

"யாருக்கு ஓட்டு போட " என்று 10.04.2009 அன்று நான் எழுதிய பதிவு (கீழே) இன்றளவும் பொருந்தும் போலிருக்கிறது. 

இது வரை நாம் தமிழகத்தில் தி.மு.க மற்றும் அ.தி.மு.க ஆட்சியையும், மத்தியில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க ஆட்சியையும் பார்த்துக்கொண்டு வருகிறோம். இந்த இரண்டு கட்சிகளுக்குள் எது ஆட்சிக்கு வந்தாலும், எந்த எந்த மாற்றங்கள் வருகின்றன என்று யோசித்து பாருங்களேன். தமிழ்நாட்டை பொறுத்தவரை அ.தி.மு.க ஜெயித்தாலும், தி.மு.க ஜெயித்தாலும், நாட்டின் நிலைமை ஒன்றுதான். சுகாதார தரமோ, அரசாங்க அலுவலகங்களின் செயல்பாடோ, லஞ்சமோ, ஊழலோ, பாதுகாப்போ, வேலைவாய்ப்புகளோ, வாழ்க்கைதரமோ எதிலாவது வேற்றுமை தெரிகிறதா? ஊடகங்களில் தான் தி.மு.கவும் அ.தி.க.வும் எதிரிகள். ஆனால், கொள்கை அளவில், அமைப்புகளில், செயல்பாடுகளில் கருணாநிதியும், ஜெயலலிதாவும் ஒரே மாதிரியானவர்கள்.

எனவே, நம் நாட்டை ஆள தகுதி உள்ள ஒரு தலைவன் எங்கே இருக்கிறான் என்பதை கடவுள் சீக்கிரம் காட்டுவாராக! அது வரை நாம் பொறுத்திருப்போம்.  காத்துக்கொண்டு இருப்பதில் நாம் சளைத்தவர்கள் இல்லையே!!!