வெள்ளி, ஜூன் 16, 2006

Reel ரஜினி




rajinifans.com இல் கடந்த பத்து ஆண்டுகளில் ரஜினி கொடுத்த சில பேட்டிகளை காண நேர்ந்தது. ஒன்றில் கூட அவர் அரசியலுக்கு வரப்போவதாக சொல்லவில்லை.


இதற்கிடையில், இந்த வார குமுதம் கேள்வி பதிலில் கேட்கப்பட்ட கேள்வியும் பதிலும்...

கேள்வி: விஜய்காந்த் - ரஜினி ஒப்பிடுக?

பதில் : ஒருவர் Real - இன்னொருவர் Reel
இவ்வளவு தெளிவாக ஒவ்வொரு பேட்டியிலும் தன் நிலையை விளக்கியிருந்தும், அரசியல் நிலையில் குழப்புகிறார் என்று கூறப்படுவதெல்லாம் அவரின் சினிமா டயலாக்குகளை வைத்து தான் என்று தெரிகிறது.

அதனால் தான் Reel ரஜினியோ?

ஞாயிறு, ஜூன் 11, 2006

புதுப்பேட்டையும் செல்வராகவனும்

இன்று (ஞாயிறு) காலை விஜய் டி.வியில், மதன் திரை பார்வையில் செல்வராகவனை பேட்டி கண்டார்கள் (புதுபேட்டைக்காக). பேட்டியில், புதுபேட்டை மக்களிடம் சரியாக போய் சேராததை போல் பேசினார் செல்வராகவன். (உண்மையில் புதுபேட்டை மெதுவாக பிக் அப் ஆவதாக கேள்வி!!). அதற்காக வருந்தியவர், இனி தமிழ் படங்கள் பண்ண போவதில்லை என்றும், தெலுகு, மற்றும் இந்தி படங்கள் பண்ண போவதாக தெரிவித்தார்.

ஆனானப்பட்ட பாலசந்தர், பாரதிராஜா, பாலுமகேந்திரா போன்றோரே தங்களது பிடித்த படங்களை மக்கள் ஏற்றுக்கொள்ளாததற்கு இத்தனை வருத்தப்பட்டதில்லை. தமிழ் சினிமாவை விட்டு விலகியதுமில்லை. நான் பார்த்த வரைக்கும் படம் நன்றாகவே இருந்தது. அத்தனை நடிகர்களை வைத்துக்கொண்டு கூலிப்படை ஆட்களை பற்றிய நிஜமான கதையை படமாக்க செல்வராகவனால் மட்டுமே முடியும். படம் மேலும் பெரிய ஹிட் ஆனால், அவர் தன் முடிவை மாற்றிக்கொள்வார் என்று நிணைக்கிறேன்.
(இந்திக்கு போனால் தானே தெரியும் நம்மவர்கள் அங்கே படும் அவதி என்னவென்று...)

சனி, ஜூன் 10, 2006

தமிழில் வலைபதிவது மிகவும் இனிமை. என் முதல் வலைபதிவை ஒரு கவிதையில் இருந்து தொடங்குகிறேன்.

நிலவு தந்த பதில்

அது ஒரு
இரவு நேர
இனிய பயணம்
பேருந்தின் ஜன்னலோரம்
பேச்சுக்கு துணையின்றி நான்.

கிராமத்து விளக்குகள்
முழித்திருக்க வில்லை -வானத்தில்
விழித்திருந்த நிலவே
விளக்கானது.

காற்றுக்கு ஏன் இவ்வளவு
வேகம்- என்
முகத்தை தகர்த்தெறிய
விர்ரென்று
வீசி அடித்தது.

வீசின காற்றின் ஊடே
வான் நோக்கி நிலவு
பார்த்திருந்தேன் -நிலவை
பார்த்ததும்- அதை
ஒன்று கேட்டு வைத்தேன்.

அன்று
என்னவளும் நானும்
பேசிய நேரத்தில் நீயும்
தூரத்தில் பார்த்திருந்தாய்
அல்லவா!
அந்த காட்சிகளை
திருப்பி தர முடியுமா?

நிலவு பதிலேதும் தரவில்லை - அமைதி
நிலவியதில் சற்றே
தூக்கத்தில் ஆழ்ந்தேன்.

தூக்கத்தில் ஒரு கனவு
கனவில் அன்று
என்னவளுடன் பேசிய
காட்சிகள் மறுபடியும்.
கனவு முடிந்து
நனவு வந்ததும்
நிணைத்துக் கொண்டேன்.
நிலவிடம் நான் கேட்ட கேள்விக்கு
நிலவு தந்த பதில் தான் கனவோ!