புதன், அக்டோபர் 11, 2017

கொசுக்களிடமிருந்து பாதுகாத்துக் கொள்ள ....

டெங்கு  காய்ச்சலால் இப்போது ஏற்பட்டு வரும் உயிரழப்பு 100 - ஐ தொட்டுள்ளது என்கிறார்கள்.  இதை யாரும் நிச்சயம் அலட்சியமாக எடுத்து கொள்ள முடியாது.   ஆனால் இதை கவனம் கொண்டு சரி படுத்த வேண்டியவர்கள் அலட்சியமாக எடுத்துக் கொண்டனரோ என்ற ஐயம் வராமலில்லை..  டெங்கு கொசு என்றால் என்ன வென்று எல்லாம் விவரிக்க தேவையில்லை.  நேராக விஷயத்துக்கு போவோம்... டெங்கு கொசுவினால் தான் இது பரவுகிறது எனில் கீழே சொல்லப் பட்டிருக்கும் யோசனைகளை பின்பற்றுங்கள்...

Image result for mosquito net on windows
-  வீட்டிலுள்ள அனைத்து ஜன்னல்களுக்கும் வலை போடுங்கள்..  கதவுகளை எப்போதும் மூடியே வைத்திருங்கள்.

-   Corporation காரர்கள் கொசு மருந்து அடிக்கும் போது, உங்களுக்கு சந்தேகம் இருக்கும் இடத்திலும் அடிக்க சொல்லுங்கள்.

Image result for amazon mosquito net bed

-  உங்கள் படுக்கை (bed) அளவுக்கு  ஏற்ப கொசு வலை amazon.com இல் கிடைக்கிறது.  இப்போதே ஆர்டர் செய்து வாங்குங்கள்..

-  Mosquito Bat- ஆல் கொசுவை அடிக்கும் போது  ஜன்னல் திரைகள், தொங்கி கொண்டிருக்கும் துணிகள், நாற்காலி, கட்டிலுக்கு பின்னே என்று இடுக்களில் உட்கார்ந்திருக்கும் கொசுக்களை கலைத்து விட்டு அடியுங்கள்.

- அதிக ஜுரத்துடன், தலைவலியும், கண்களை அசைக்கும் பொது வலியும் இருந்தால் உடனேயே டாக்டரை போய் பாருங்கள். 

மற்றபடி கொசுவிரட்டி மருந்துகள் உபயோகிப்பது, ஓடோமொஸ் தடவிக் கொள்வது போன்றவை எல்லோரும் அறிந்ததே....

நான்  சிறு பையனாக இருந்த சமயத்தில் (90 களில்) வீட்டில் ரோபோ படத்தில் வரும் பந்து போல ஒரு கொசு பந்து (கொசு பண்ணை??) ஆங்காங்கே தெரியும்.  நாங்கள், வீட்டில்லுள்ளவர்கள் அதை ஒரு வலையிலோ, துணியுலோ பிடித்து அடித்து விடுவோம்.  வீட்டின் வெளியே சாலையில் நின்று பேசிக்கொண்டிருக்கும் போது தலைக்கு மேலே ஒரு கொசு வட்டம் தெரியும்.  கொசுவை கையால் பிடித்து தூக்கி போடும் வரை அது மேலே உட்கார்ந்து ரத்தத்தை உறிந்து கொண்டிருக்கும். இதை பற்றியெல்லாம் அப்போது கவலை பட்டதே இல்லை.  அப்போதைய நல்ல காலம் டெங்கு என்றால் என்ன என்றே அப்போது தெரியாது.  இப்போது நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது.  நல்ல தான்யா கிளப்புறீங்க ...டெங்கு ..சிக்கன் குன்யா என்று தான் கேட்க தோன்றுகிறது...  உண்மையிலேயே டெங்கு கொசுவால் தான் வருகிறதோ இல்லையோ மேலே சொன்ன யோசனைகளை பின்பற்றுங்கள்.... டெங்கு சீசன் முடிந்தவுடன் வேறு ஒன்றை கிளப்பி விடுவார்கள்.. அப்போது வேறு யோசனைகள் ...



ஞாயிறு, அக்டோபர் 08, 2017

வோலோகாப்டர் - The Air Taxi



Image result for volocopter



இனிமேல் மனிதர்கள் வானத்தில் தும்பிகள் மாதிரி பறக்க போகிறார்கள்.  ஆம்.  இப்போது ஹெலிகாப்டர் போல வோலோகாப்டர் என்று ஒரு வானூர்தி வந்து விட்டது.  அலுவலகம் செல்வது, மார்க்கெட் செல்வது, சிட்டிக்குள் ரவுண்டு அடிப்பது.. எல்லாமே இனிமேல் வோலோகாப்டரில் தான்.

போனவாரம் தான் மனைவியுடன் கடைக்கு செல்கையில் பேசிக் கொண்டிருந்தேன்.  இன்னும் பத்து இருபது வருடங்களில் மக்கள் ஆபீஸ் போவதற்கு வானத்திலேயே சிறிய பறக்கும் டாக்சியில் போய்விட்டு வருவார்கள் என்று... பெரிய ஆருடம் எல்லாம் இல்லை.  ரொம்ப நாட்களுக்கு முன்பே எங்கோ இந்த  விஷயத்தை பற்றி படித்து இருந்தேன்.  இன்று டிவியில் துபாயில் இந்த வானூர்தியை அறிமுகப் படுத்த போகிறார்கள் என்று செய்தியை பார்த்ததும் ஏன் மனைவிக்கு ஆச்சர்யம்.  நீங்க போன வாரம் தாங்க சொன்னீங்க ... இப்ப பாருங்க அதே மாதிரி வந்து விட்டது என்று... ஆம் ஐயாவுக்கு நிகழ்காலம் , வருங்காலம் எல்லாம் தெரியும் என்று கொஞ்சம் தம்பட்டம் அடித்துக்  கொண்டாலும்,  இந்த கண்டுபிடிப்பு அடுத்து எதில் போய் முடியும் என்று யோசனை வந்து விட்டது.


வானத்தில் டிராபிக் சிக்னல் வைக்க முடியாது.  நம்ம ஆட்கள் தங்கள் இஷ்டத்துக்கு ஒட்டி பழக்க பட்டவர்கள்.  இவர்களை ஒழுங்காக ஒருத்தர் மீது ஒருத்தர் இடிக்காமல் ஓட்ட என்ன செய்வார்கள்.  அதற்கும் வழி இருக்கும் போலிருக்கிறது.  GPS (Global positioning system) பயன்படுத்தி இப்போது Aeroplane பறப்பது மாதிரி விபத்துக்கள் இல்லாமல் பயன்படுத்தலாம் என்று சொல்கிறார்கள்.  இந்த வோலோகாப்டர்களை வோலாகாப்டர் என்னும் ஜெர்மன் நிறுவனமும், Airbus, Uber போன்ற நிறுவனங்களும் தயாரிக்க இருக்கின்றது.  இப்போது இதை துபாயில் மாதிரி ஓட்டம் செய்து பார்த்து இருக்கிறார்கள்.  இன்னும் சில மாதங்களில் பயன் பாட்டுக்கு வந்து விடும்.






நமக்கு உணவு இல்லாவிட்டாலும் தங்க இடம் இல்லாவிட்டாலும், நல்ல சாலைகள் இல்லாவிட்டாலும் செல் போன் வேண்டும், bullet train போன்றவை வேண்டும் ஆயிற்றே ... எனவே கூடிய விரைவில் இந்த வோலோகாப்டர் இந்தியாவுக்கு வந்து விடும் என்று நம்பலாம்.   சைக்கிள், பைக் வாங்கி கொடுத்தது போய், வருங்காலத்தில் அப்பாக்கள், பெண் வீட்டார்கள்  வோலோகாப்டர்கள் வாங்கி கொடுப்பார்கள்.  இந்த விஷயத்தில் எனக்கு ஒரு ஆசை இருக்கிறது.  மனிதனின் இந்த கண்டுபிடிப்புகள் நன்றாக தான் இருக்கிறது.  கூடவே, நம் மக்கள் தொகையை குறைக்க ஏதாவது செய்தால் தேவலை ... இல்லையென்றால் இந்த கண்டுபிடிப்புகள் கோடிக்கணக்காக இருக்கும் நம் மக்கள் ஒழுங்காக பயன்படுத்த முடியாமல் போக வாய்ப்பிருக்கிறது.

செவ்வாய், அக்டோபர் 03, 2017

மக்களும் இன்றைய அரசியலும் ...

மக்கள் ரொம்பவே மாறி விட்டார்கள் என்றும், இன்றைய அரசியலில் நடிகர்களுக்கு மக்களின் ஆதரவு கிடையாது என்றும் கேள்வி படுகிறோம். உதாரணம், ஜல்லிக்கட்டு, நெடுவாசல் போராட்டங்களில் நடிகர்களின் பங்களிப்பு இல்லவே இல்லை என்று கண்டோம். அஜித், விஜய் என்று தீவிரமான ரசிகர்கள் இருந்தாலும் அன்றாட  பிரச்சனைகளுக்கு நடிகர்களை எதிர்நோக்கி மக்கள்  இல்லை என்று சொல்கிறார்கள்.  இங்கு  தான் ஒரு முரண்பாடு தெரிகிறது.  

Image result for தமிழ் நாட்டு மக்கள் அரசியல்Image result for அரசியலில் சினிமாக்காரர்கள்

நடிகர்களுக்கு அரசியலில் ஆதரவு கிடையாது... சரி...  இப்போது இருக்கும் அரசியல்வாதிகளும் ஒருவர் பாக்கி இல்லாமல் யாரும் சுத்தமானவர் கிடையாது.  அப்படியானால் யாரை தான் மக்கள் ஆதரிப்பார்கள்.  புதிதாய் ஒருவர் முளைப்பார் என்று காத்திருப்பார்களா ?  சகாயம் போன்றவர்கள் அஞ்சுவதிலும் நியாயம் இருக்கிறது.  யோசித்து பாருங்கள் . தினம் இரண்டு மிரட்டல் போன் கால் வந்தால் எப்படி இருக்கும்.. அப்படி என்றால் மக்கள் விரும்பும் படித்த நேர்மையான மனிதர் யார் அரசியலுக்கு வரக்கூடும்??

எனக்கு தெரிந்த ஒருவர் இருக்கிறார்.  பள்ளியில் ஒழுங்காக படிக்காமல் படிப்பை பாதியில் கை விட்டார். பிறகு சொந்தமாக கடை வைக்கிறேன் என்று அதையும் சரியாக செய்யாமல் விட்டு விட்டார்.  அடுத்தது என்ன ? இருக்கவே இருக்கிறது வீடு வாடகை புரோக்கர் தொழில், ரியல் எஸ்டேட் தொழில், சீட்டு நடத்தும் தொழில்.. இதையெல்லாம் செய்கிறார்.  ஆனால் இவர்கள் இதை செய்யும் போதே அரசியலில் யாராவது இழுத்து விடுகிறார்கள்.  அவர் விஜயகாந்த் கட்சியில் சேர்ந்தார்.  விஜயகாந்த் எல்லாம் அவருக்கு பிடித்தமான நடிகர் இல்லை. ஆனாலும், கட்சியில் இருந்தால் ஒரு சப்போர்ட் என்பார்.  அங்கு அவருக்கு சரியான கவனிப்பும், வருமானமும் இல்லாததால், அதை விட்டு விட்டு இன்னொரு கட்சியில் சேர்ந்து விட்டார்.  இப்படி தான் பெரும்பாலும் வீணாய் போன இளைஞர்கள் அரசியலில் ஈடு படுகிறார்கள்.  இவர்களை கொண்டது தான் இன்றைய கட்சிகள்.  அப்படியானால் நல்ல மனிதர்கள் யார் தான் அரசியலுக்கு வருவார்கள்? வந்தால் விட்டு விடுவார்களா ?

IT கம்பனிகளில் வேலை செய்பவர்களும், அரசாங்க உத்தியோகத்தில் உள்ளவர்களும், டாக்டர்களும் , வழக்கறீங்கர்களும, engineergalum, ஆசிரியர்களும், தொழிலதிர்பகளும், விளையாட்டு வீரர்களும்  மற்றும் பல கலைஞர்களும் (பாடகர், இசையமைப்பாளர், நடனமாடுவோர்)  யாரவது அரசியலுக்கு வர யோசிப்பார்களா ?? எத்தனை பேர் இவர்களில் இது வரைக்கும் வந்து இருக்கிறார்கள்.  வர மாட்டார்கள்.  ஏனென்றால் இவர்களுக்கு பின்னால் மக்கள் சப்போர்ட் இல்லை.  இவர்களை அரசியல் வாதிகள் சுலபமாக மிரட்டியே ஓட வைத்து விடுவார்கள்.  ஒரு சமயம் ஒரு பத்திரிக்கை ஓட்டெடுப்பு நடத்தியது.  தமிழ் நாட்டில் சிறந்த பத்து விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்கள், எழுத்தாளர்கள் என்று நீண்டது பட்டியல்.  உண்மையிலேயே பத்து பேர் எழுதுவது மிக கடினமாக இருந்தது.  இதை ஏன் சொல்கிறேன் என்றால், சினிமா காரர்களை விட மற்ற துறைகளில் பிரபலமானவர்கள் மிக மிக குறைவு.  சினிமா காரர்கள் பின்னாடி தான் மக்கள் கூட்டம் இருக்கிறது.  மக்கள் சப்போர்ட் இருந்தால் தான் அரசியல் வாதிகள் பயப்படுவார்கள். அதனால் தான் சினிமா காரர்கள் தைரியமாக அரசியலுக்கு வருகிறார்கள்.

எனவே, சினிமாக்காரன் வேண்டாம் என்று சொல்லும் மக்களே, மற்ற துறையில் யாருக்கு பின்னால் அணிவகுப்பீர்கள் என்று சொல்லுங்கள்... ஒருவரும் வரமாட்டார்கள் ... வந்தாலும் இன்றைய அரசியல் சிஸ்டத்தில் அவர்களை தாக்கு பிடிக்க விட மாட்டார்கள்...இப்போதைக்கு நம் தலை எழுத்து சினிமாக்கார்களுடன் தான்.  ரஜினியோ கமலோ நல்ல அரசியல் வாதியாக இருந்தால் ரொம்ப நல்லது...  அது எப்படியோ, தமிழ் நாட்டில் இப்படி தான் என்று இந்த நிலைமை வந்து விட்டது.  மற்ற துறையில் உள்ளவர்களுக்கு பின்னால் மக்கள் அணிதிரளும் வரை சினிமா காரர்களை ஆதரிப்போம்...

வெள்ளி, செப்டம்பர் 15, 2017

குருட்டுத்தனமா நாம் ஏன் சிலரை சப்போர்ட் செய்கிறோம் ??

பணமதிப்பிழப்பு வந்த முதல் நாள், எனக்கு இது சரிப்பட்டு வராது என்று தோன்றியது.  அன்னைக்கே அணைத்து ATM களிலும் பெரும் கூட்டம்.  ஒரே தள்ளு முள்ளு.  அடுத்த நாள் நண்பர்களுடன் பேசும் பொது சில பேர் இது நல்ல திட்டம் என்றும் சிலர் என்னை மாதிரி திட்டவும் செய்து கொண்டிருந்தார்கள்.  நல்ல திட்டம் என்று சொன்னவர்கள் எல்லாம் மோடிக்கு நேரம் கொடுக்க வேண்டும்.  கஷ்டபட்டால் தான் பின்னால் பலன் கிடைக்கும் என்றெல்லாம் சொன்னார்கள்.  நான் கேட்டேன் - அலுவலகங்களில் கூட புதிதாய் சேர்ந்தவர்களுக்கு ஆறு மாதம் தான் probation period கொடுக்கிறார்கள்.  மோடியை போன்று பிரதமர்கள் சேர்ந்த முதல் நாளிலேயே பலன் காட்ட வேண்டாமா? ... அவர் என்ன Trainee யா ? என்றெல்லாம் கேட்டேன்.

இப்போது இந்த subject பற்றி பேசும் போது, நிறைய பேர் மாறி இருப்பது தெரிகிறது.  பெட்ரோல் விலையும், GST யினால் வந்த விலையேற்றமும், GDP கீழே போய்க் கொண்டிருப்பதும் மற்றும் neet போன்ற சமுதாய பிரச்சனைகளும் மக்கள் எண்ணத்தை மாற்றிக் கொண்டிருக்கிறது. ஆனாலும், இதை எல்லாம் கவனிக்காது , இல்லை கவனிக்காதது போல சிலர் நடித்துக் கொண்டிருகின்றனர்.  இவர்கள் குருட்டுத்தனமாக ஏன் சிலரை சப்போர்ட் செய்கிறார்கள் ?  தலைப்புக்கு வந்து விட்டேன்.

நாம் ஏதேதோ காரணத்தால் சிலரை பற்றி நல்ல அபிப்ராயம் வைத்திருப்போம்.  அவரை பற்றி சமுதாயத்தில் நல்ல பிம்பம் இருக்கும் வரை நமக்கும் சந்தோசம்.  நாம் அவரை சரியாக தான் கணிதிருக்கிறோம் என்று. திடீரென்று ஒரு நாள் அவர் ஒரு ஏமாற்றுகாரர்...குற்றம் புரிந்தவர் என்று கேள்விப்படும் போது அதை நம்ப நம் மனம் மறுக்கிறது.  ஏன் என்றால், இத்தனை  காலம் இவரை போய் நாம் நல்லவர் என்று நினைத்திருந்தோமே... நாம் என்ன முட்டாளா என்று நம் மனம் நம்ப மறுக்கின்றது.  அதற்கு  பதில் நாமே, இவர் அவரை காட்டிலும் நல்லவர் என்று சமாதனாம் செய்து கொள்கிறோம்.  இப்படி தான் நிறை பேருக்கு ஜெயலலிதாவை பிடித்திருந்தது.  இப்பொது அவர் குற்றவாளி எனவும், அவரால் தான் தமிழ்நாடு இப்படி கேவலமான ஒரு நிலைமைக்கு வந்து இருக்கிறது என்ற உண்மை புலப்பட வில்லை.  சமமான மன நிலையில் யோசித்தால் சுலபமாக புரியும்.  ஆனால், நாம் முட்டாளாக இருந்தோமே என்று மனம் ஒத்துக் கொள்வதில்லை.

இப்படி இருந்தால் நாம் என்றுமே முட்டாள் தனத்தில் இருந்து மீளவே முடியாது.  சூழ்நிலைக்கேற்ப மனசை மாற்றிக் கொள்ள தெரிந்திருக்க வேண்டும்.  விஜயை பிடித்து விட்டால் பிடித்தது தான்.  அஜித்தின் நல்ல குணங்கள் புரியாது.  அதே மாதிரி தான் அஜித்தை பிடித்து விட்டால் விஜயின் நல்ல விஷயங்கள் தெரியாது.  மனசை ப்ரீயா விடுங்களேன் ....கொஞ்சம் புரியுதான்னு பாப்போம் ....

ஞாயிறு, செப்டம்பர் 10, 2017

NEET: மாணவர்களை தூண்டிவிடும் அரசியல்வாதிகள் !!!

முதலிலேயே சொல்லிவிடுகிறேன்.  நான் டெல்லி பக்கம் இல்லை. இருந்தாலும், கடந்த நாட்களாக நடந்து வரும் neet தேர்வுக்கான மாணவ எதிர்ப்பு, 85, 90 களில் MGR, கருணாநிதி காலத்தில் நடந்த போராட்டங்களை நினைவு படுத்துகின்றன.  அப்போதெல்லாம், அடிக்கடி ஸ்கூல் மற்றும் காலேஜ் லீவ் விடுவார்கள்.  அது indefinite strike ஆகவும் இருக்கும்.  எங்களுக்கு பிரச்சனையின் சாரம் என்னவெல்லாம் தெரியாது.  லீவ் கிடைத்தது என்று மிகவும் சந்தோஷமாக இருக்கும்.  இப்போது நடக்கும் neet பிரச்சனையை மாணவர்கள் சரியாக புரிந்து கொண்டார்களா என்று சந்தேகம் வருகிறது. யாராவது அரசியல்வாதிகள் பின்னால் இருந்து இயக்குகிறார்களா என்று தெரியவில்லை ..

மருத்துவ படிப்பு தேர்வுக்கு Neet மதிப்பெண்கள் + பள்ளி மதிப்பெண்கள் இரண்டையும் எடுத்துக் கொண்டால் பிரச்சனையே இல்லையே...எதற்கு நீட்டே தேவையில்லை என்று போராட வேண்டும்?  சின்ன சின்ன பிள்ளைகள் எல்லாம் பெண்கள் உட்பட வீதிக்கு வந்து போராட ஆரம்பித்துவிட்டார்கள். பிரபலங்கள் இன்னும் twitter விட்டு வராத நிலையில் மக்கள் போராடுவது நல்ல முன்னேற்றம் தான்.  இருந்தாலும் நமக்கு நல்ல வழிகாட்டி இல்லையே.. நீட்டும் வேண்டும் , பள்ளி மதிப்பெண்களும் வேண்டும் என்று யாரும் வழி காட்டுற மாதிரி தெரியலையே ...

இதில் பள்ளிகூடங்கள் செய்யும் அநியாயத்தையும் சொல்லியாக வேண்டும். தங்கள் பாட வகுப்பிற்கு மிக சாதரணமான பாடத்திட்டத்தை வைத்துகொண்டு neet தேர்வுக்கும், IIT தேர்வுக்கும் சிறப்பு வகுப்புகளை அநியாய விலைக்கு மாணவர்களை சேர்த்து கொள்கிறார்கள்.  இது CBSE பள்ளிகளுக்கும் பொருந்தும்.  இப்படி கல்வியை இவர்கள் கொள்ளையடிக்க மட்டுமே பயன்படுத்தினால் அப்புறம் அணிதாக்கள் எப்படி டாக்டர்கள் ஆக முடியும் ??  

Image result for class viii maths book cbseImage result for class viii maths book cbse

சனி, செப்டம்பர் 02, 2017

மருத்துவ கல்லூரிகள் அதிகம் திறந்தால் தான் என்ன ??

Image result for mbbs admission


இந்தியாவில் 2000 பேருக்கு ஒரு டாக்டர் தான் இருக்கிறார்.  இன்றும் கூட , நமக்கு ஏதாவது ஒன்றென்றால் பக்கத்தில் நல்ல டாக்டர் தேடி தவிக்கிறோம். டாக்டருக்கு அவ்வளவு demand.  ஆனாலும் கூட, நம் இந்தியாவில் 199 cut off வாங்குவோருக்கு டாக்டர் சீட் கிடைக்கும்.  190 cut off வாங்குவோருக்கு கிடைக்காமல் போகலாம்.  190 க்கும் , 199 க்கும் எவ்வளவு பெரிய வித்தியாசம். அறிவளவில், இரண்டு மாணவரிடையே எவ்வளவு வித்தியாசம் இருக்க கூடும்??  இன்னும் அதிகமாக மருத்துவ கல்லூரிகள் திறந்து அதிக மாணவர்களை எடுத்துக் கொண்டால் தான் என்ன ??? 

என்னை பொறுத்தவரை ஒரு சீனியர் டாக்டரிடம் ஒரு படிக்காத பையனை சேர்த்து,  அவருடன் அவன் ஒரு பத்து வருடம் இருந்தால் மருத்துவம் பார்க்க பழகி கொள்வான். எதற்கு இவ்வளவு ஸ்க்ரீனிங்.. மண்ணாங்கட்டி . .. வத வத என்று மக்கள் வெள்ளத்தை வைத்துக் கொண்டு மருத்துவர்கள் பற்றாக்குறை வேறு !! அந்த காலத்தில் மருத்துவம் பார்க்க எந்த தேர்வு எழுதினார்கள்.  neet வரும்..வராது... என்று மாணவ செல்வங்களை எவ்வளவு அலைகழீத்தீர்கள்...எத்தனை பேர் டாக்டர் சீட் கிடைக்காதென்று பொறியியல் கல்லூரியில் பணம் கட்டி சேர்த்து விட்டிருக்கிறார்கள். நாளைக்கு அந்த பணம் திரும்பி கிடைக்குமா ?  அந்த நஷ்ட ஈடை அரசு கொடுக்குமா ? கோர்ட் உத்தரவு போடுமா ?

தயவு செய்து அதிக மருத்துவ கல்லூரிகள் திறவுங்கள் ..neet கூட + 2 மார்க்கையும் சேர்த்து தேர்ந்தெடுங்கள்.. மாணவர்கள் வாழ்க்கையில்
விளையாடாதீர்கள் ...  



வியாழன், ஆகஸ்ட் 31, 2017

ஒரிஜினல் ஓட்டுனர் உரிமமும் அரசின் பொறுப்பின்மையும்


Image result for chennai bad roads

செப்டம்பர் முதல் ஒரிஜினல் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வண்டி ஒட்டி மாட்டினால் 3 மாத சிறை தண்டனை அல்லது 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது.  சிறை அளவுக்கு தண்டனையை நீட்டி முழக்க மக்கள் மீது கொண்டிருக்கும் அக்கறை என்று சொல்லுகிறார்கள்.  இதனால் சாலை விபத்துக்களை குறைக்கலாம் என்று யாரோ அரைகுறை அறிவு ஜீவி சொல்லி செயல் படுத்த போகிறார்கள்.

ஆனால், பல விபத்துக்கள் அரசாங்கத்தின் கவனக் குறையால் ஏற்படுகிறதே!!  சாலையில் தென்படும் குண்டு குழிகள், ஸ்பீட் breakerin மேல் அழிந்து போன சாயம், வேலை செய்யாத டிராபிக் சிக்னல், சாலை விதிகளை மதிக்காத பேரூந்துகள், தண்ணீர் லாரிகள்,  குறைந்த எண்ணிக்கை பேருந்துகள், ரயில்கள், நேரத்துக்கு வராத அரசு வாகனங்கள்....முட்டாள்தனமான சாலை வளைவுகள், அறிவிப்புகள் இல்லாதது போன்ற பல காரணங்களால் ஏற்படும் விபத்துக்களுக்கு அரசு தான் காரணம்.  அரசை யார் கண்டிக்க போகிறார்கள்.  இப்போதுள்ள கோர்ட் கேள்வி மேல் கேள்வி கேட்பதோடு சரி..

ஒரு முறை நான் எப்போதும் செல்லும் சாலையில் காரில் சென்றுகொண்டிருந்தேன்.   ஒரு இடத்திற்கு வந்தவுடன் இடது புறமாக திரும்ப வேண்டும்.  அங்கே எப்போதும் free left தான் இருக்கும்.  அதனால் நான் வழக்கமாக இடது புறத்தில் திரும்பியவுடனும், ஒரு டிராபிக் போலீஸ் கார் என்னை பிடித்துவிட்டார்.  என்ன என்று கேட்ட போது இங்கே free left இல்லையென்றார்.  அதற்கு புதிதாய் ஒரு இடத்தில் (பார்பதற்கே சிரமமான இடத்தில்) நட்டு வைத்திருந்த NO FREE LEFT அறிவிப்பு பலகையை காண்பித்தார். அதற்கு முன்பு அந்த அறிவிப்பு அங்கே இல்லை.  ஓஹோ ...போலீஸ் கார் சட்டை பை நிரப்பி கொள்ள செய்த வேலை போலிருக்கிறது என்று புரிந்தது.   நான் படும் துயரமும் , ஆச்சரியத்தையும் பார்த்து அவருக்கு சிரிப்பு வேறு  வந்தது.   திடீரென்று அங்கே ஒரு அறிவிப்பு பலகையை வைத்து பணம் பிடிங்கியதால் அது அவருக்கு ஹாசியமாய் பட்டது. 

இப்படி தான் நம் சாலை விதிகள் சிரிப்பாய் சிரிக்கிறது.  ஆனால் இம்சை என்னமோ மக்களுக்கு தான்.  யாரவது PIL (பொது நல வழக்கு) போட்டு இந்த செப்டம்பர் மாத ஓட்டுனர் உரிமம் விதியை நிறுத்தி விட்டால் நன்றாக இருக்கும்.  ஒரிஜினல் உரிமம் தொலைந்து விட்டோ, damage ஆகிவிட்டாலோ, இன்னொன்று வாங்க நாம் எவ்வளவு கஷ்ட படனும்னு யோசித்தால் ......

 





செவ்வாய், ஆகஸ்ட் 29, 2017

கமலுக்கு ஒரு விண்ணப்பம் ..


Image result for kamalhassan

கமலுடைய tweets சந்தோசம் அளிக்கிறது.   அட்லீஸ்ட், இவராவது அரசியல் வாதிகளை தைரியமாக விமர்சிக்கிறாரே என்று.  ஆனால், தி.மு .க பற்றி இவர் விமர்சனம் வைப்பதில்லை என்றும், ஜெயலலிதா இருக்கும் போது இவர் ஏன் விமர்சனம் வைக்கவில்லை என்று இவர் மேலயும் விமர்சனம் இருப்பது வேறு கதை.  

கமலின் தமிழ் நாட்டின் அரசியல் மீதான கோபம் வரவேற்க கூடியது தான் என்றாலும், அவர் இதையும் தாண்டி practicalaaga ஏதாவது செய்ய வேண்டும் என்று எதிர்பார்கிறேன்.  ஏனென்றால், வர வர தமிழ் நாட்டு மக்களுக்கு எப்பேர்பட்ட அதிர்ச்சி தர கூடிய செய்தி என்றாலும் அவையெல்லாம் மிகவும் சாதாரணமாக ஆகி விட்டது.  ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம், எடப்பாடி, பன்னீர்செல்வம் அடிக்கும் லூட்டிகள், நிலையான அரசு இல்லாதது, ப.ஜ.கவின் நேரடியான தலையீடு, சசிகலாவின் ஜெயில் சலுகை இப்படி எல்லாமே ஒன்றை ஒன்று மிஞ்சும் செய்திகள்.  இதையெல்லாம் தினமும் பார்த்தும், கேட்டும், விவாதித்தும் கடைசியில் இது எல்லாம் ஒன்றும் இல்லை என்றாகி விட்டது.  இந்த வரிசையில் கமலின் tweets கூட ஒன்றுமில்லை என்றாகிவிட வாய்ப்பிருக்கிறது. 

அதனால் கமல் tweets தாண்டி உருப்படியாக ஏதாவது செய்ய வேண்டுமென்றால், அவர் வீதிக்கு வந்து போராட வேண்டும்.  அதற்காக கொடி பிடிப்பது, லத்தியில்எ அடி வாங்குவது, ஜெயில் எல்லாம் போக வேண்டியதில்லை.  கமலுக்கு இதுயெல்லாம் இமாலய தூரம்.  ஒன்னு செய்யலாம்.  தன் தொகுதியில் இருக்கும் குடிமை பிரச்சனைகளுக்கு (civic issues), வார்டு கவுன்சிலரிடம், corporation அதிகாரிகளிடமும் புகார் தெரிவிக்கலாம். புகார் கொடுக்கும் போது தன் ரசிகர்களை  ஒன்றிணைத்து அதற்கு தலைமை தாங்கலாம்.  நிச்சயம் இந்த நடவடிக்கை அணைத்து மீடியாக்களையும் கவரும்.  விவாத பொருளாகும்.  இப்படியும் அந்த பிரச்சனைகள் தீர வில்லை என்றால், அடுத்த கட்டமாக கோர்ட்டில் பொது நல வழக்காக தொடுக்கலாம்.  டிராபிக் ராமசாமி செய்யும் போது கமல் செய்ய முடியாதா ??  

சரி , இதெல்லாம் கமலால் செய்ய முடியுமா ??  செய்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்.  வெறும் ட்விட்டரில் காகித போர் செய்வது எந்த விதத்திலும் பயன் தரக்கூடியதில்லை ..

சனி, மே 20, 2017

ரஜினியிடம் நம்பிக்கை சுடர்

Image result for rajinikanth raajadhi raja


இதற்கு  முந்தைய பதிவுகளில் கூடிய விரைவில் தமிழகத்தில் ஒரு நல்ல தலைவர் வருவார் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று எழுதி இருந்தேன். அது ரஜினியாக இருக்க கூடாதா என்று ஏக்கம் இருந்தாலும் இப்படி திடீரென்று அவர் அறிவிப்பார் என்று நினைக்கவில்லை. ஆனால் புலி வருது கதையாய் இத்தனை வருடங்களாக மக்களை காக்க வைத்ததில் மக்களுக்கு  அவர் மேல் நிறையவே கோபம் இருப்பது தெரிகிறது.  

ட்விட்டர், Facebook போன்றவற்றில் வரும் சில ரஜினி வெறுப்பு பதிவுகள் மிகுந்த ஆச்சர்யம் அளிக்கின்றன.  ஒருவரை இப்படியா நேசிக்க முடியும் என்று ரஜினி ரசிகர்களை (வெறியர்களை) சொல்லுவார்கள்.  அதே போல தான் ஒரு மனிதனை இப்படியும் வெறுக்க முடியுமா என்பதை போல இருக்கின்றன அவர்கள் பதிவுகள்.  ரஜினி விஷயத்தில் இரு பிரிவுகள் மட்டுமே இருக்கிறது.   ஒன்று அவரை பிடிப்பவர்கள். அல்லது அவரை வெறுப்பவர்கள்.  என்னை பொறுத்த மட்டில், ரஜினியை வெறுப்பவர்கள் தங்களை அறிவாளிகள் என்று நினைத்து கொள்ளும் அரை வேக்காடுகள் (Pseudo Intellectuals).  ரஜினி படத்தை வானூர்தியில் வரைந்ததை கண்டவுடன் இவர்களுக்கு எப்படி இருந்திருக்கும்?  இந்தியா முழுவதும் ரஜினியின் பிரபலம் வளர்வதை கண்டு இவர்கள் வயிறு எப்படி எரிந்திருக்கும்.  எப்போது கிடைக்கும் ரஜினியை திட்டும் சான்ஸ் என்று காத்திருந்தவர்களுக்கு இப்போது கிடைத்திருக்கிறது. 

கன்னடத்து ரஜினி, மராட்டிய ரஜினி என்று என்னைய்யா இது.  நம் நாட்டை குஜராத்தி மோடி தானே ஆண்டு கொண்டிருக்கிறார்.  தமிழ் நாடும் சேர்த்து தானே.  இல்லை எங்கள் தமிழ் நாட்டுக்கு தமிழ்  பிரதமர் தான் வேண்டும் என்று சொல்வீர்களா.  தமிழ் நாட்டு கவர்னர் யார்? தமிழ் நாட்டை சேர்ந்தவரா?  ரஜினியை வந்தேறி என்று சொல்வது இன்னும் அபத்தம். அப்படியானால், தமிழ் நாட்டில் இருந்து எத்தனையோ நாடுகளில் குடிபெயர்ந்திருக்கும் தமிழர்களை வெளியேறிகள் என்று சொல்லனுமா? இவர்கள் மண்டைக்குள் என்ன ஒட்டடையா இருக்கிறது. 

இது வரைக்கும் ரஜினி தமிழ் நாட்டுக்கு என்ன செய்தார் என்று கேள்வி அபத்தமாக இல்லையா?  அவர் இன்னும் சினிமாவில் தான் இருக்கிறார். இனிமேல் தான் அரசியலுக்கு வர போகிறார். அவர் அரசியலுக்கு வந்த பின்னர் தான் அரசியல் பற்றிய கேள்விகள் கேட்க வேண்டும்.  அதுவும் இல்லாமல் அவர் அரசியல் பற்றி இப்போது பேசியது அவரின் ரசிகர்களிடம் தானே... பிரஸ் மீட் வைத்து அதனை மீடியாக்களை அழைத்து அரசியலுக்கு வருவது பற்றி மக்களுக்கா தெரிவித்தார்??  ரஜினியின் @superstarrajini என்ற ட்விட்டர் tag வேறு இவர்களுக்கு கிடைத்து விட்டது.  இந்த பச்சை தமிழர்கள் தங்கள் தமிழ் மொழியில் தங்களுக்கு தெரிந்த கெட்ட கெட்ட வார்த்தைகளை எல்லாம் போட்டு ரஜினியை tag செய்து tweet செய்கிறார்கள்.  தனிப்பட்ட முறையில் இவர்களுக்கு ரஜினி என்ன தீங்கு செய்து விட்டார்.  ரஜினி இவர்கள் யாரையும் மிரட்ட மாட்டார்... ஆள் வைத்து அடிக்க மாட்டார் என்ற தைரியம் தானே...ஒன்றுமே செய்யாத MLA, விவசாயிகள் பிரச்சனை தீர்க்க முடியாத மந்திரிகள் இவர்களை கெட்ட வார்த்தைகள் போட்டு திட்ட முடியுமா?  

சரி, தலைப்புக்கு வருகிறேன்.  ரஜினியிடம் அரசியல் விஷயத்தில் தெரியும் பிளஸ் பாயிண்டுகள் என்ன ?

1.  தன்னை எதிர்க்கும் யாரையும் பதிலுக்கு எதிர்ப்பது கிடையாது...பழைய தமிழ்நாட்டில் நாம் பார்த்த அரசியல் நாகரீகம்..
2.  இப்போது நடத்திய ரசிகர்கள் கூட்டத்தை ஒழுங்குமுறையாக நடத்தியது.. சாராய, பிரியாணி பாக்கெட் இல்லாமல்... அடையாள அட்டையோடு..
3.  சிஸ்டம் சரியில்லை என்று சரியாக சொன்னது.  ஒரு டிராபிக் சிக்னல் சரியில்லை என்றால் எப்படி டிராபிக் ஜாம் ஆகும் என்று நினைத்து பாருங்கள்.  அதற்காக மக்களை குறை சொல்ல முடியுமா ??
4.  எல்லாவற்றை காட்டிலும் முக்கியமாக பணம் இல்லாதவர்கள் விலகி விடுங்கள். ஏமாந்து போவீர்கள் என்று தனது ரசிகர்களை பார்த்தே சொன்ன தைரியம்.  இந்த  மாதிரி இந்திய அரசியலில் எந்த அரசியல் வாதியும்  சொன்னது கிடையாது.  
5.  குடியை விடுங்கள் சிகரெட்டை விடுங்கள் என்று அன்பாக அட்வைஸ் செய்வது....

இது வரைக்கும் ரஜினிக்கு மக்களிடம் இருக்கும் அரசியல் சப்போர்ட் பற்றி எத்தனையோ opinion poll வந்து விட்டன.  அத்தனையிலும் மினிமம் 40 % சப்போர்ட் ரஜினிக்கு கிடைத்து இருக்கிறது.  60% எதிர்க்கிறார்கள்.   அரசியலுக்கு வருவதற்கு முன்னரே 40% ஆதரவு என்றால், வந்தவுடன் ???? 
சும்மா அதிருதுல்ல !!!  

கச்ச தீவை புடுச்சுட்டு வருவோம், தமிழ் மண்ணை தமிழன் தான் ஆள வேண்டும்... காவிரி தண்ணீர் கொண்டு வருவோம் என்று வெற்று அரசியல் செய்து கொண்டிருப்பர்கள் பயந்து தான் போயிருக்கிறார்கள்.  ரஜினியின் படம் வானூர்தியில் வரைய பார்த்த ரஜினியை வெறுப்பவர்களுக்கு அப்போது பாதி உயிர் போயிருந்தது என்றால், இப்போது ரஜினி அரசியலுக்கு வருவேன் என்று கூறியுள்ளது மீதி உயிரை எடுத்து விட்டது...அப்பப்பா என்னா புலம்பல்...

நீங்கள் அரசியலுக்கு வாருங்கள் தலைவா....



ஞாயிறு, மார்ச் 12, 2017

தமிழ்நாடு இன்னும் கெட்டு போகட்டும்..

Back again after long time!!!

கடந்த ஐந்து ஆறு மாதங்களில் தான் எவ்வளவு விஷயங்கள் நடந்து முடிந்து விட்டன.  ஜெயலலிதாவின் மரணம் தொடங்கி, பண மதிப்பழிப்பு நடவடிக்கை, வரதா புயல், மெரினா புரட்சி, சசிகலா அரசியல்..இப்போது நெடுவாசல், மீனவர் பிரச்சனை என்று முக்கிய நிகழ்வுகள் நீண்டுக் கொண்டே இருக்கின்றன.

எல்லாவற்றையும் கவனிக்கையில், இப்போதெல்லாம் நாட்டு நடப்புகள் சட் சட்டென்று மாறி வருவதும், அதை விட முக்கியமாக மக்களும், அதிலும் இளைஞர்கள் பெருமளவு  பங்கேற்று வருவதும் சந்தோஷமே...  இவர்களுக்கெல்லாம் வழிகாட்டியாக இப்படி ஒரு தருணத்தில் ஒரு தலைவர் இல்லாதது தான் ஒரே குறையாக தெரிகிறது.  இருந்தாலும் இந்த மாற்றங்கள் எல்லாம் இன்னும் சிறிது காலத்தில் கொஞ்சம் கொஞ்சமாக  ஒரு தலைவரை உருவாக்கி விடுமென்றே தோன்றுகிறது.   கமல் ரொம்பவே சஞ்சல பட்டு அரசியலில் கிட்டத்தட்ட தொபுக்கடீர்ன்னு குதித்து விடலாம்னு முடிவே பண்ணிட்டு பிறகு பழைய அடிகளும், விழுப்புண்களும் ஞாபகம் வந்து , சுப்ரமணிய சுவாமியின் குடைச்சலும் தாங்க முடியாததால் reverse அடித்து விட்டார்.  

ரஜினி மீது மக்கள் உச்ச பட்ச கோபத்தில் இருப்பதும் தெரிகிறது.   எதோ அவர் வந்தால் நல்லது செய்வார் என்ற எதிர்பார்ப்பு முன்னர் இருந்தது. ஆனால் இது இருபது வருடங்களாக முடியாத தொடர் கதை போலானதும், இப்போது தமிழ் நாட்டில் இத்தனை நடந்தும் கண்டுக்கொள்ளாத ரஜினியை யாருக்கும் பிடிக்கவில்லை.  

நடிகர்களாவது பரவாயில்லை.  சகாயம், பொன்ராஜ் (அப்துல் கலாமிற்கு அறிவியல் ஆலோசனை வழங்கியவர்) போன்றோரும், மற்ற துறையில் உள்ளோரும் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும் அளவு அவர்களுக்கு தைரியம் வர வில்லை.   நாமும் இத்தனை நிகழ்வுகளை பார்த்துக்கொண்டும் ஏதாவது கருத்துக்களை முகநூலிலும் வாட்ஸாபிலும் போட்டு விட்டு நம் வேலையை கவனித்து வாழ்க்கையை ஓட்ட கற்றுக் கொண்டோம்.

மெரினா புரட்சி போன்று இன்னொரு முறை நடக்க வேண்டுமென்றால் அதற்கு தமிழ் நாடு இன்னும் கெட்டு போக வேண்டும் போலிருக்கிறது.  கூவத்தூர் கூத்துக்களும், மீனவர் சுட்டு இறந்ததும், நிலை இல்லாத தமிழக அரசியலும், நெடுவாசல் போராட்டமும் போதவே போதாது. இப்படி பிரச்சனை மேல் பிரச்சனைகள் தமிழனை அழுத்தி திமிர வைக்கும் போது இன்னொரு புரட்சி வெடிக்கும்.  அதற்கு தமிழகம் இன்னும் கெட்டு போக வேண்டும். இப்போதைய நிகழ்வுகளை ஒரு அளவு கோலில் வைத்து பார்ப்போமானால் அவை எவ்வளவு தரம் தாழ்ந்து போய்க்கொண்டு இருக்கிறது என்று உணர முடியும்.  சீக்கிரம் அது bottom most நிலைக்கு போகும் போது ஒரு மாற்றம் வருமா என்று பார்ப்போம்.