புதன், மே 27, 2009

பிராபகரன் சுதந்திர போராட்டத் தியாகியா? தீவிரவாதியா?

இந்த தலைப்பு சமீப காலமாக என்னை குழப்பி வருகிறது. நான் பிரபாகரனைப் பற்றி அறிந்தது எல்லாம், தமிழ் பத்திரிக்கைகள் மூலமாகவும், தமிழ்நாட்டு அரசியல் வாதிகளின் மூலமாகவும் தான். அவை எல்லாமே எனக்கு அவர் மேல் ஒரு நல்ல அபிப்பிராயத்தையே உண்டு பண்ணியிருக்கிறது. மனதை தொட்டு சொல்வதென்றால், எனக்கு பிராபகரன் மேல் ஒரு Soft Corner உண்டு. இதற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில், விடுதலைப்புலிகள் தமிழ்நாட்டு மக்களுக்கு எந்தவொரு இடையூறும் செய்யாமல் இருந்தது, இத்தனை தமிழ் வீரர்களை போராட்த்தில் பங்கேற்க செய்தது, Colombo போன்ற இலங்கை நகரங்களில் நேரடியாக மக்களை தாக்காதது, அவர்களின் தமிழ் மேல் உள்ள ஈடுபாடு, கட்டுப்பாடு போன்றவை.

ஆனால், இங்கு இந்தியாவில், Times now, NDTV போன்ற தொலைக்காட்சி ஊடகங்களில் பிராபகரனை தீவிரவாதியாகவே செய்தியிட்டு வருகிறார்கள்.
அவர் தீவிரவாதி என்று நம்பும் எவராது இருந்தால் தயவு செய்து அதற்கு ஆதாரமாக விளக்கங்கள் (உதாரணத்தோடு) அளிக்குமாறு வேண்டிக்கொள்கிறேன். Let us clarify ourselves with the Data.

திங்கள், மே 25, 2009

சிறந்த குடும்பத் தலைவன்

பீகாரின் முதல்வர் நித்திஷ் குமார் காங்கிரஸ்க்கு பாராளுமன்றத்திற்கு ஆதரவு தர ஒரு நிபந்தனை விதித்தார். அது, பீகாருக்கு முக்கிய அந்தஸ்த்து அளிக்க வேண்டுமென்று!!! அதாவது, பீகாருக்கு பல நல்ல திட்டங்கள் கிடைக்க வேண்டுமென்று.

நம் முதல்வர் கருணாநிதி விதித்த நிபந்தனை - தன் குடும்பத்தார் அனேகருக்கு மந்திரி பதவி வேண்டுமென்பது. தான் சொத்து சேர்த்து, பிறகு தன் சந்ததியே தலைமுறைக்கு சொத்து சேர்த்து, பணக்காரர்களாய் வாழ வேண்டுமென்று நினைக்கும் அவர் சிறந்த குடும்பத்தலைவன் தானே. என்ன நான் சொல்வது? சரியா?