வியாழன், ஆகஸ்ட் 31, 2017

ஒரிஜினல் ஓட்டுனர் உரிமமும் அரசின் பொறுப்பின்மையும்


Image result for chennai bad roads

செப்டம்பர் முதல் ஒரிஜினல் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வண்டி ஒட்டி மாட்டினால் 3 மாத சிறை தண்டனை அல்லது 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது.  சிறை அளவுக்கு தண்டனையை நீட்டி முழக்க மக்கள் மீது கொண்டிருக்கும் அக்கறை என்று சொல்லுகிறார்கள்.  இதனால் சாலை விபத்துக்களை குறைக்கலாம் என்று யாரோ அரைகுறை அறிவு ஜீவி சொல்லி செயல் படுத்த போகிறார்கள்.

ஆனால், பல விபத்துக்கள் அரசாங்கத்தின் கவனக் குறையால் ஏற்படுகிறதே!!  சாலையில் தென்படும் குண்டு குழிகள், ஸ்பீட் breakerin மேல் அழிந்து போன சாயம், வேலை செய்யாத டிராபிக் சிக்னல், சாலை விதிகளை மதிக்காத பேரூந்துகள், தண்ணீர் லாரிகள்,  குறைந்த எண்ணிக்கை பேருந்துகள், ரயில்கள், நேரத்துக்கு வராத அரசு வாகனங்கள்....முட்டாள்தனமான சாலை வளைவுகள், அறிவிப்புகள் இல்லாதது போன்ற பல காரணங்களால் ஏற்படும் விபத்துக்களுக்கு அரசு தான் காரணம்.  அரசை யார் கண்டிக்க போகிறார்கள்.  இப்போதுள்ள கோர்ட் கேள்வி மேல் கேள்வி கேட்பதோடு சரி..

ஒரு முறை நான் எப்போதும் செல்லும் சாலையில் காரில் சென்றுகொண்டிருந்தேன்.   ஒரு இடத்திற்கு வந்தவுடன் இடது புறமாக திரும்ப வேண்டும்.  அங்கே எப்போதும் free left தான் இருக்கும்.  அதனால் நான் வழக்கமாக இடது புறத்தில் திரும்பியவுடனும், ஒரு டிராபிக் போலீஸ் கார் என்னை பிடித்துவிட்டார்.  என்ன என்று கேட்ட போது இங்கே free left இல்லையென்றார்.  அதற்கு புதிதாய் ஒரு இடத்தில் (பார்பதற்கே சிரமமான இடத்தில்) நட்டு வைத்திருந்த NO FREE LEFT அறிவிப்பு பலகையை காண்பித்தார். அதற்கு முன்பு அந்த அறிவிப்பு அங்கே இல்லை.  ஓஹோ ...போலீஸ் கார் சட்டை பை நிரப்பி கொள்ள செய்த வேலை போலிருக்கிறது என்று புரிந்தது.   நான் படும் துயரமும் , ஆச்சரியத்தையும் பார்த்து அவருக்கு சிரிப்பு வேறு  வந்தது.   திடீரென்று அங்கே ஒரு அறிவிப்பு பலகையை வைத்து பணம் பிடிங்கியதால் அது அவருக்கு ஹாசியமாய் பட்டது. 

இப்படி தான் நம் சாலை விதிகள் சிரிப்பாய் சிரிக்கிறது.  ஆனால் இம்சை என்னமோ மக்களுக்கு தான்.  யாரவது PIL (பொது நல வழக்கு) போட்டு இந்த செப்டம்பர் மாத ஓட்டுனர் உரிமம் விதியை நிறுத்தி விட்டால் நன்றாக இருக்கும்.  ஒரிஜினல் உரிமம் தொலைந்து விட்டோ, damage ஆகிவிட்டாலோ, இன்னொன்று வாங்க நாம் எவ்வளவு கஷ்ட படனும்னு யோசித்தால் ......

 





செவ்வாய், ஆகஸ்ட் 29, 2017

கமலுக்கு ஒரு விண்ணப்பம் ..


Image result for kamalhassan

கமலுடைய tweets சந்தோசம் அளிக்கிறது.   அட்லீஸ்ட், இவராவது அரசியல் வாதிகளை தைரியமாக விமர்சிக்கிறாரே என்று.  ஆனால், தி.மு .க பற்றி இவர் விமர்சனம் வைப்பதில்லை என்றும், ஜெயலலிதா இருக்கும் போது இவர் ஏன் விமர்சனம் வைக்கவில்லை என்று இவர் மேலயும் விமர்சனம் இருப்பது வேறு கதை.  

கமலின் தமிழ் நாட்டின் அரசியல் மீதான கோபம் வரவேற்க கூடியது தான் என்றாலும், அவர் இதையும் தாண்டி practicalaaga ஏதாவது செய்ய வேண்டும் என்று எதிர்பார்கிறேன்.  ஏனென்றால், வர வர தமிழ் நாட்டு மக்களுக்கு எப்பேர்பட்ட அதிர்ச்சி தர கூடிய செய்தி என்றாலும் அவையெல்லாம் மிகவும் சாதாரணமாக ஆகி விட்டது.  ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம், எடப்பாடி, பன்னீர்செல்வம் அடிக்கும் லூட்டிகள், நிலையான அரசு இல்லாதது, ப.ஜ.கவின் நேரடியான தலையீடு, சசிகலாவின் ஜெயில் சலுகை இப்படி எல்லாமே ஒன்றை ஒன்று மிஞ்சும் செய்திகள்.  இதையெல்லாம் தினமும் பார்த்தும், கேட்டும், விவாதித்தும் கடைசியில் இது எல்லாம் ஒன்றும் இல்லை என்றாகி விட்டது.  இந்த வரிசையில் கமலின் tweets கூட ஒன்றுமில்லை என்றாகிவிட வாய்ப்பிருக்கிறது. 

அதனால் கமல் tweets தாண்டி உருப்படியாக ஏதாவது செய்ய வேண்டுமென்றால், அவர் வீதிக்கு வந்து போராட வேண்டும்.  அதற்காக கொடி பிடிப்பது, லத்தியில்எ அடி வாங்குவது, ஜெயில் எல்லாம் போக வேண்டியதில்லை.  கமலுக்கு இதுயெல்லாம் இமாலய தூரம்.  ஒன்னு செய்யலாம்.  தன் தொகுதியில் இருக்கும் குடிமை பிரச்சனைகளுக்கு (civic issues), வார்டு கவுன்சிலரிடம், corporation அதிகாரிகளிடமும் புகார் தெரிவிக்கலாம். புகார் கொடுக்கும் போது தன் ரசிகர்களை  ஒன்றிணைத்து அதற்கு தலைமை தாங்கலாம்.  நிச்சயம் இந்த நடவடிக்கை அணைத்து மீடியாக்களையும் கவரும்.  விவாத பொருளாகும்.  இப்படியும் அந்த பிரச்சனைகள் தீர வில்லை என்றால், அடுத்த கட்டமாக கோர்ட்டில் பொது நல வழக்காக தொடுக்கலாம்.  டிராபிக் ராமசாமி செய்யும் போது கமல் செய்ய முடியாதா ??  

சரி , இதெல்லாம் கமலால் செய்ய முடியுமா ??  செய்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்.  வெறும் ட்விட்டரில் காகித போர் செய்வது எந்த விதத்திலும் பயன் தரக்கூடியதில்லை ..