இந்தியா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இந்தியா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், ஜூன் 02, 2016

ஸ்வட்ச் பாரத் - ஹிட்டா? ப்ளாப்பா ?


Image result for swachh bharat abhiyan

கண்ட கண்ட பொது இடங்களில் Mr. பொது ஜனம் உச்சா போறதை இந்த ஸ்வட்ச் பாரத் நிறுத்தி விட்டதா?  காத்தாட வெளியே போறத விட்டுட்டு  இந்த தண்ணி வராத கழிப்பறைக்கு யாரு போவாங்கன்னு பேசுகிற பொது ஜனத்தை இந்த திட்டம் மாற்றி விட்டதா?  ஆனால் சூரியன் F.M இல், ஸ்வட்ச்   பாரத் பற்றிய விளம்பரம் அடிக்கடி வருகிறது.  அதுவும் ஹிந்தியில்!!  எப்படி பட்ட காம்பினேஷன் பாருங்கள்!!  விளம்பரம் கொடுப்பவர்க்கு இது தமிழ்நாடு, ஹிந்தியில் விளம்பரம் கொடுத்தால் யாருக்கும் புரியாது என்பது புரியவில்லை.  அந்த விளம்பரத்தை போடும் சூரியன் அலைவரிசைக்கோ ஹிந்தியில் விளம்பரம் கொடுத்தால் தங்கள் கழகத்தின் தமிழ் காவலர் இமேஜ் கெட்டு போகுமோ என்று கவலையில்லை.  எல்லாம் பணம் ஐயா பணம்...

எது எப்படியோ, இந்த திட்டம் ஆரம்பித்து இரண்டு வருடங்கள் ஆகி விட்டன. ஆரம்பத்தில், வி.ஐ.பி என்று அறியப்படும் பெரிய மனிதர்கள் நிறைய பேர் கையில் துடைப்பத்தோடு காட்சி கொடுத்தனர்.  நம் கமல்ஹாசன் கூட அந்த மாதிரி பத்திரிக்கை புகைப்படங்களில் வந்தார்.  ஆனால் கையில் பக்கெட்டோடு ஏரியை சுத்தபடுத்துவதற்காக. 

Image result for kamal hassan swachh bharatImage result for kamal hassan swachh bharat


இப்படி இவர்கள் எல்லாம் கையில் துடைப்பத்தோடும் பக்கெட்டோடும் போட்டோவிற்கு போஸ் கொடுத்ததற்கு யாரும் துட்டு கொடுக்க வில்லையோ என்னவோ, ஸ்வட்ச் பாரத் படத்திற்கு கால்ஷீட் கொடுப்பதை நிறுத்தி விட்டார்கள்.  நான் இருக்கும் சிங்கார சென்னையை  பார்க்கிறேன்.  குப்பை கூளங்களும், சாலையில் சாக்கடை ஒழுகி ஓடுவதும், ரோட்டில் எச்சில் துப்புவதும், குப்பையை வீசுவதும் எதுவும் நிற்கவில்லை.  இப்போது தான் ஸ்வட்ச் பாரத் திட்டம் பிகார், உத்தர் பிரதேஷ் போன்ற இடங்களில் சுற்றிக் கொண்டிருக்கிறது. எப்போது தமிழ்நாடு வருமென்று தெரியவில்லை. ஆனால் அதற்குள் நம்மூருக்கும் ஸ்வட்ச்பாரத் வரியென்று 0.5% வரி போட்டு விட்டார்கள்.  

இந்த திட்டத்தின் படி 2019  ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் திறந்தவெளி கழிப்பதை அடியோடு நிறுத்துவதே முதல் நோக்கமாகும்.  இதற்காக 12 கோடி கழிப்பறைகளை கிராமங்களில் கட்ட வேண்டும் என்ற மத்திய அரசாங்கம் திட்டமிட்டு இருக்கிறது. இதற்காக டாட்டா, மகிந்திரா போன்ற நிறுவனங்களும், உலக வங்கியும் பொருளுதவி செய்கின்றன.  முக்கியமாக பெண்கள் கழிப்பறை தேடி வீட்டிற்கு வெளியே செல்வது மோடி அவர்களுக்கு அதிக கவலை கொடுத்திருக்கிறது.  மோடியின் இந்த திட்டம் மிகவும் நல்ல திட்டம்.  நான் கூட, சுதந்திரம் கிடைத்த இத்தனை வருடங்களில் காந்தி, நேரு  முதற்கொண்டு அப்துல் கலாம் வரை யாரும் சுத்தம் சுகாதாரம் பற்றி பெரிதாக சீர் திருத்தம் கொண்டு வரவில்லையே என்று யோசித்ததுண்டு. ஆனால் முதன்முறையாக தூய்மை இந்தியா என்ற திட்டத்தை கொண்டு வந்த மோடியை பாராட்டுகிறேன்.   அவர் கனவு நனவாக இன்னும் சில வருடம் காத்திருப்போம்.  கழிப்பறை மட்டுமில்லாமல் அதற்கும் மேலே பொது இடங்களில் சுகாதாரம் பற்றியும் அவரது திட்டம் அமையும் என்றும் எதிர்பார்ப்போம்.  

அனால் நம் Mr. பொது ஜனமும் கொஞ்சம் மனசு வந்து பொது இடங்களில் உச்சா போறது, எச்சில் துப்புறது, லுங்கி கட்டிக்கொண்டு டாஸ்மாக்கில் சரக்கடித்து ரோட்டோரத்தில் உருண்டு கிடப்பது, வாங்கின பிளாஸ்டிக் கவரை கண்ட இடங்களில் போட்டு விடுவது போன்றவற்றை நிறுத்தவும் இந்த ஸ்வட்ச்பாரத் திட்டம் இப்போதே வகை செய்ய வேண்டும்.  இதற்காக பொறுத்திருந்து 2025 லேயா திட்டமிடமுடியும்?  நம் நாட்டில் எதற்குமே கொஞ்சம் அதிகம் போராட வேண்டும் போலிருக்கிறது.  சுதந்திரம் வாங்க எவ்வளவு கஷ்டப்பட்டோம்.  அது போல சுகாதாரம் வாங்கவும் கஷ்டப்பட வேண்டும் போலிருக்கிறது.  முன்னது வெள்ளைக்காரனிடமிருந்து வாங்க போராட வேண்டியிருந்தது.  பின்னது, நம்மிடமிருந்து நாமே வாங்க போராட வேண்டியிருக்கிறது.  பொதுநலம் நம் சுயநலமாக இருக்கட்டுமே !!!

சரி!!  ஸ்வட்ச் பாரத் - ஹிட்டா? ப்ளாப்பா ? இன்னும் ஒரு வருடம் கழித்து பார்ப்போம்.






திங்கள், ஜனவரி 25, 2016

வியாபாரத்திற்காக விஜயம் செய்யும் பிரதமர்கள்

பிரதமர்களுக்கும், ஜனாதிபதிகளுக்கும் பல நாடுகளுக்கு விஜயம் செய்வது ஒரு முக்கியமான வேலை!!  நம் பிரதமர் மோடியை தானே மனதில் நினைதுக்கொள்கிறீர்கள்.  அவரை மட்டும் சொல்லவில்லை. பெரும்பாலும் அனைத்து பிரதமர்களும், ஜனாதிபதிகளும் இப்படி தான். ஏதோ ஒரு விஷயத்தை வைத்து அந்த பிராயணம் இருந்தாலும்,  அதற்கு பின் ஒரு வியாபார நோக்கம் இருக்கும்.
Image result for hollande visit to india
Image result for angela merkel visit to india

குடியரசு தினத்திற்கு விஜயம் செய்வது மாதிரி French அதிபர் ஹாலண்ட் இந்தியா வருகிறார்.  ஆனால் இதற்கு பின்னால், தங்களது Rafale போர் ரக விமானங்களை விற்பதும், அணு நிலையம் அமைப்பதும், ஸ்மார்ட் சிட்டி கட்டி கொடுப்பது முக்கிய காரணங்களாக இருக்கிறது. போன வருடம், ஜெர்மனியின் பிரதமர் அஞ்ஜெலா மெர்கல் இந்தியா வந்தார்.  இது நேரடியாக வியாபாரத்திற்கான விஜயம்.  ரசாயனம், இயந்திரம், மின்சார பொருட்கள், சூரிய ஒளி சக்தி போன்றவற்றில் 14,600 கோடி முதலீடுக்காண கையொப்பம் போட்டு இருக்கிறார்கள்.  இதே போல் தான் சீனாவில் இருந்தும் ஜப்பானில் இருந்தும் பிற நாடுகளில் இருந்தும் பிரதமர்கள் நம் நாட்டுக்கு விஜயம் செய்வது.

இது எல்லாம் சரி தானே.  அவர்கள் நாட்டில் தொழில்நுட்பம் இருக்கிறது. அதிக அளவில் உற்பத்தி நடக்கிறது.  எங்கேயாவது விற்க தானே வேண்டும்.  நம் நாட்டில் கொண்டு வந்து எதை வேண்டுமானாலும் வியாபாரம் செய்யலாம். விற்கலாம்.  அவற்றையெல்லாம் வாங்க தான் நாம் எவ்வளவு மக்கள் தொகை கொண்டுள்ளோம்.  அவர்கள் இந்திய பணத்தை அள்ளிக் கொண்டு செல்லலாம்.  வெள்ளையன் காலம் தொட்டு இது தானே நடக்கிறது. இப்போது ஒரு மாறுதல்.  நம் பிரதமரும் தொடர்ச்சியாக வெளிநாடுகளுக்கு பிரயாணம் செய்கிறார்.  ஆனால் நம் பொருட்களை உலக சந்தையில் விற்பதற்காக   அல்ல.   வெளிநாட்டுகாரர்களை கெஞ்சி கூத்தாடி நம் நாட்டுக்கு அழைத்து தொழில் செய்ய வைப்பதற்கு. யோசித்தால், நம்முடைய வளத்தையும், செல்வத்தையும் அவர்களுக்கே தாரை வார்த்து  கொடுக்க வேண்டியிருக்குமோ என்று அஞ்ச  வைக்கிறது இந்த பயணங்கள்.   பெரும்பாலும் வெளிநாடுகள் தங்களது மொக்கையான காலாவதியான தொழில்நுட்பங்களை கொண்டே இந்தியாவில் தொழிற்சாலைகள் அமைக்கிறார்கள்.  சில விதிவிலக்குகளை தவிர.  

இதையெல்லாம்  பார்க்கும் போது  ஒரு பழமொழி ஞாபகம் வருகிறது.  
எள்ளு எண்ணைக்காக காய்கிறது.  எலி புழுக்கை ஏன் சேர்ந்து காய்கிறது ???

ஆனால் நம் பிரதமர் வேறு ஏதாவது திட்டம் வைத்திருக்கிறாரோ என்னமோ? என் சிறிய அறிவுக்கு எட்டாத வாறு?




 


சனி, டிசம்பர் 02, 2006

அடையாளம்

இந்த பதிவு, எல்லோரும் சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதற்கான வெளிப்பாடு. நாடு சுதந்திரம் அடைந்து விட்டது. ஆனால் நம் வீடும் நாம் சார்ந்திருக்கும் சமுதாயமும், இனமும் நமக்கு சுதந்திரம் அளிக்கவில்லை. ஒவ்வொருவரும் ஒரு அடையாளத்தை சுமந்துக்கொண்டு அதன் மூலம் மற்றவரை நோகடித்துகொண்டு வாழ்கிறோம்.

நாம் பிறக்கும் போது அமையும் அடையாளங்களான உடலின் அமைப்பு, நிறம் தவிர நமக்கு வேறு அடையாளங்கள் இருந்ததில்லை. ஆனால் நாம் வளர, வளர எத்தனையோ அடையாளங்கள் வந்து நம்மீது ஒட்டிக்கொள்கிறது.

ஹிந்துவாய் பிறந்தவன் என்றால் அவனுக்கு நெற்றியில் குங்குமம், விபூதி, சிவப்பு கோடு, பட்டைக்கோடு.
முஸ்லீம் என்றால் தலையில் குல்லா, நீண்ட அங்கி, தாடி........ இப்படி...
இவை மாதிரி christians-க்கு இல்லை என்றாலும் மற்ற அடையாளங்கள் உண்டு.

இந்த அடையாளங்களை பழித்தோ நீக்கசொல்லியோ பாருங்கள். அது பெரிய சமுதாய குற்றமாக ஆகிவிடுகிறது. ஐய்யரை எடுத்தால் அவர் விஞ்ஞானியாக இருந்தாலும், நிறுவனத்தின் General Manager-ஆக இருந்தாலும் பூணூல் போட்டிருக்க வேண்டும். ஐய்யர் உடம்பு பூணூலோடே வாழவேண்டும். அந்த உடம்பின் விதி அப்படி. அறிவியல் படி அந்த நூலால் எதாவது உடலுக்கு நல்லது என்றால் மருத்துவர்கள் சிபாரிசு செய்யலாம்.

முஸ்லீம்கள் தலையில் தாடியும், நீண்ட அங்கி அணிந்துக்கொள்வதும் அவர்களுக்கும், அதை பார்ப்பவர்களுக்கும் ஒரு தண்டனையாகவே தெரிகிறது. சர்தார்கள் தலையில் நிரந்தர குல்லா போட்டுக்கொள்வதும் அப்படியே.

இதை எதற்கு சொல்கிறேன் என்றால், நீண்ட அங்கியும், தாடியும் போட்டிருக்கும் முஸ்லீம்கள், நெற்றியில் கோடு போடும் ஹிந்துக்கள், கறுப்பு பர்தா போட்டு திரியும் உருவங்கள் எல்லாம் சில சமயங்கள்ளிலும், சில இடங்களிலும் மனிதர்களை பயமுறுத்துவதாக உள்ளது.

மனிதன் சுதந்திரமாக வாழவேண்டும். இஷ்டப்பட்டால் தாடி, இல்லை வெறும் மீசை, விரும்பிய சிகை அலங்காரம், விருப்ப உடையணிதல் ஆகியவை வேண்டும். ஒருவனை பார்த்தால் அவன் முஸ்லீமா, ஹிந்துவா, கிறிஸ்டியனா என்று தெரியக்கூடாது. முதலில் நாமெல்லோரும் Phisical அடையாளங்களை விட்டொழிப்போம். பிறகு, நம் பழக்கங்கள், சாதி மற்றும் மத நெறிமுறைகளின் அடையாளங்களை விடுவதைப் பற்றி யோசிக்கலாம்.

ஞாயிறு, ஜூலை 16, 2006

Mumbai- குண்டுவெடிப்பு

முதலில் இதற்கு என் கண்டனத்தை தெரிவித்துக்கொண்டாலும், இது போன்று இன்னும் எத்தணை நிகழப்போகிறது என்று மனது அச்சம் கொள்கிறது. இப்போதெல்லாம், வருடம் தோறும் மழை வெள்ளம், இரண்டு ஆண்டிற்கொருமுறை நிலநடுக்கம், ஐந்து ஆண்டுகளுக்கொருமுறை குண்டுவெடிப்பு என்று வரைமுறை வைத்துக்கொள்ள வேண்டும் போல!!.

ராணுவத்தின் துணைக்கொண்டு தீவிரவாதத்தை ஒடுக்க வேண்டும். அதை விட்டுவிட்டு, பேச்சு வார்த்தை, கண்டனம், Bus போக்குவரத்து, உல்லாச பயணம்- இப்படி போய்க்கொண்டிருந்தால் குண்டு வெடிப்புகளும் வாடிக்கையாகிவிடும். எங்கேயாயினும், நாம் காணும் ஓர் இறப்புக்கே எத்தனை அழுகல், சோகம், இழப்பு பார்க்கின்றோம். அத்தணை உயிர் பறிபோனதில், எவ்வளவு பாதிப்பு இருக்கும் என்று நினைத்துப் பார்க்க முடியவில்லை.

கடவுளும், மன்மோகன் சிங்கும் இந்தியா ஒரு ஈராக்காக (குண்டு வெடிப்பில்) மாறாமல் இருக்க உதவ வேண்டும்.