ஞாயிறு, ஏப்ரல் 17, 2016

Flop ஆகி போன தேர்தல் அறிக்கைகள்...

தேர்தல் அறிக்கை என்பதை எல்லாம் மக்கள் சீரியஸ் ஆக எடுத்துக் கொள்வதில்லை என்பது கட்சிகளுக்கு நன்றாக தெரிந்து விட்டது.  போன தேர்தலில் சொன்னதை எல்லாம் மக்கள் ஞாபகம் வைத்திருக்கிறார்களா என்ன?  அதனால் எதை வேண்டுமானாலும் அடித்து விடலாம் என்ற தைரியம். வானத்தில் உள்ள நட்சத்திரத்தை பிடுங்கி கொண்டு வருவோம், இமய மலையை தமிழ் நாட்டுடன் சேர்த்து விடுவோம் என்று இஷ்டத்துக்கு கதை விடறது...  கச்ச தீவை மீட்பது, தமிழ் மொழியை மத்தியில் ஆட்சி மொழியாக கொண்டு வருவது எல்லாம் இப்படி தான்.  நடு நடுல இலவசம் இலவசம்னு சிலதை போட்டுக்கணும்.  

ஆனால் மக்களாகிய நாம் செய்ய வேண்டியது... நம் தொகுதியில் போன முறை வெற்றி பெற்றவர் கடந்த தேர்தல் அறிக்கையில் சொன்னதையெல்லாம் செய்து விட்டாரா என்று பார்ப்பது அவசியம்.  அப்படி செய்யவில்லை என்றால் அந்த கட்சியை தவிர்ப்பது நல்லது.  

இப்படி ஒரு தேர்தல் அறிக்கையை பார்க்க வேண்டும் என்று எனக்கு ஒரு ஆசை;

-  அணைத்து திட்டங்களையும் இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை மறுஆய்வு  
   செய்யவோம்.  அதில் மக்களின்  கருத்துக்களும் இடம் பெற செய்வோம்.

-  தூய்மை இந்தியா திட்டத்திற்கு மத்திய அரசாங்கத்துடன் சேர்ந்து 
   ஒத்துழைப்போம்.

-  சென்னை போன்ற மக்கள் அடர்த்தி உள்ள நகரங்களை விரிவு 
   படுத்துவோம்.  புதிய அடுக்கு மாடி கட்டிடங்களை இங்கே கட்ட அனுமதி 
   கொடுக்க மாட்டோம்.

-  கல்வி தரத்தை உயர்த்துவோம்.  தொழிற்முறை கல்விக்கு முக்கியத்துவம் 
   கொடுப்போம்.

-  புதிய மின் நிலையங்களை தொடங்கி மின்சார தட்டுப்பாடை நீக்குவோம்.

-  மதுவிற்கு எதிரான பிரசாரத்தை தீவர படுத்துவோம்.  மது கடைகளை 
   திறந்து வைத்திருக்கும் நேரத்தை குறைப்போம்.

-  எந்த பொதுப்பணி துறையின் வேலையானாலும் அதை தரத்துடன், உரிய 
   காலத்தில் முடிப்போம். ப்ராஜெக்ட் முடியும்வரை அதன் தற்போதைய 
   நிலையை  மக்களுக்கு தெரியப் படுத்துவோம்.  

- அரசாங்க மருத்துவமனைகளின் தரத்தை உயர்த்துவோம்.

இப்படி எத்தனையோ... படிப்படியாக செய்வோம்  என்றால் கூட நல்லது.  ஆனால் இங்கே என்ன நடக்கிறது.  தேர்தல் அறிக்கையை வைத்து தேர்தல் நடப்பதில்லை.  ஒரு கட்சியை பற்றி  மற்ற கட்சி மோசமான வார்த்தைகளால் வசை பாடுவது, ஓட்டுக்கு பணம் கொடுப்பது மட்டுமே நடக்கிறது. இவ்வாறு நடப்பதற்கு மக்களாகிய நாம் இடம் கொடுத்து விட்டோமா என்று தோன்றுகிறது.  கொஞ்சம் யோசிப்போம் மக்களே!!!








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக