செவ்வாய், டிசம்பர் 19, 2006

கலக்குங்க தலைவா கலக்குங்க..


சூப்பர் ஸ்டாரின் புது மொட்டை ஸ்டைல். வழக்கம் போல் தலைவர் பட்டையை கிளப்புறார்.

சனி, டிசம்பர் 02, 2006

அடையாளம்

இந்த பதிவு, எல்லோரும் சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதற்கான வெளிப்பாடு. நாடு சுதந்திரம் அடைந்து விட்டது. ஆனால் நம் வீடும் நாம் சார்ந்திருக்கும் சமுதாயமும், இனமும் நமக்கு சுதந்திரம் அளிக்கவில்லை. ஒவ்வொருவரும் ஒரு அடையாளத்தை சுமந்துக்கொண்டு அதன் மூலம் மற்றவரை நோகடித்துகொண்டு வாழ்கிறோம்.

நாம் பிறக்கும் போது அமையும் அடையாளங்களான உடலின் அமைப்பு, நிறம் தவிர நமக்கு வேறு அடையாளங்கள் இருந்ததில்லை. ஆனால் நாம் வளர, வளர எத்தனையோ அடையாளங்கள் வந்து நம்மீது ஒட்டிக்கொள்கிறது.

ஹிந்துவாய் பிறந்தவன் என்றால் அவனுக்கு நெற்றியில் குங்குமம், விபூதி, சிவப்பு கோடு, பட்டைக்கோடு.
முஸ்லீம் என்றால் தலையில் குல்லா, நீண்ட அங்கி, தாடி........ இப்படி...
இவை மாதிரி christians-க்கு இல்லை என்றாலும் மற்ற அடையாளங்கள் உண்டு.

இந்த அடையாளங்களை பழித்தோ நீக்கசொல்லியோ பாருங்கள். அது பெரிய சமுதாய குற்றமாக ஆகிவிடுகிறது. ஐய்யரை எடுத்தால் அவர் விஞ்ஞானியாக இருந்தாலும், நிறுவனத்தின் General Manager-ஆக இருந்தாலும் பூணூல் போட்டிருக்க வேண்டும். ஐய்யர் உடம்பு பூணூலோடே வாழவேண்டும். அந்த உடம்பின் விதி அப்படி. அறிவியல் படி அந்த நூலால் எதாவது உடலுக்கு நல்லது என்றால் மருத்துவர்கள் சிபாரிசு செய்யலாம்.

முஸ்லீம்கள் தலையில் தாடியும், நீண்ட அங்கி அணிந்துக்கொள்வதும் அவர்களுக்கும், அதை பார்ப்பவர்களுக்கும் ஒரு தண்டனையாகவே தெரிகிறது. சர்தார்கள் தலையில் நிரந்தர குல்லா போட்டுக்கொள்வதும் அப்படியே.

இதை எதற்கு சொல்கிறேன் என்றால், நீண்ட அங்கியும், தாடியும் போட்டிருக்கும் முஸ்லீம்கள், நெற்றியில் கோடு போடும் ஹிந்துக்கள், கறுப்பு பர்தா போட்டு திரியும் உருவங்கள் எல்லாம் சில சமயங்கள்ளிலும், சில இடங்களிலும் மனிதர்களை பயமுறுத்துவதாக உள்ளது.

மனிதன் சுதந்திரமாக வாழவேண்டும். இஷ்டப்பட்டால் தாடி, இல்லை வெறும் மீசை, விரும்பிய சிகை அலங்காரம், விருப்ப உடையணிதல் ஆகியவை வேண்டும். ஒருவனை பார்த்தால் அவன் முஸ்லீமா, ஹிந்துவா, கிறிஸ்டியனா என்று தெரியக்கூடாது. முதலில் நாமெல்லோரும் Phisical அடையாளங்களை விட்டொழிப்போம். பிறகு, நம் பழக்கங்கள், சாதி மற்றும் மத நெறிமுறைகளின் அடையாளங்களை விடுவதைப் பற்றி யோசிக்கலாம்.