திங்கள், ஜனவரி 25, 2016

வியாபாரத்திற்காக விஜயம் செய்யும் பிரதமர்கள்

பிரதமர்களுக்கும், ஜனாதிபதிகளுக்கும் பல நாடுகளுக்கு விஜயம் செய்வது ஒரு முக்கியமான வேலை!!  நம் பிரதமர் மோடியை தானே மனதில் நினைதுக்கொள்கிறீர்கள்.  அவரை மட்டும் சொல்லவில்லை. பெரும்பாலும் அனைத்து பிரதமர்களும், ஜனாதிபதிகளும் இப்படி தான். ஏதோ ஒரு விஷயத்தை வைத்து அந்த பிராயணம் இருந்தாலும்,  அதற்கு பின் ஒரு வியாபார நோக்கம் இருக்கும்.
Image result for hollande visit to india
Image result for angela merkel visit to india

குடியரசு தினத்திற்கு விஜயம் செய்வது மாதிரி French அதிபர் ஹாலண்ட் இந்தியா வருகிறார்.  ஆனால் இதற்கு பின்னால், தங்களது Rafale போர் ரக விமானங்களை விற்பதும், அணு நிலையம் அமைப்பதும், ஸ்மார்ட் சிட்டி கட்டி கொடுப்பது முக்கிய காரணங்களாக இருக்கிறது. போன வருடம், ஜெர்மனியின் பிரதமர் அஞ்ஜெலா மெர்கல் இந்தியா வந்தார்.  இது நேரடியாக வியாபாரத்திற்கான விஜயம்.  ரசாயனம், இயந்திரம், மின்சார பொருட்கள், சூரிய ஒளி சக்தி போன்றவற்றில் 14,600 கோடி முதலீடுக்காண கையொப்பம் போட்டு இருக்கிறார்கள்.  இதே போல் தான் சீனாவில் இருந்தும் ஜப்பானில் இருந்தும் பிற நாடுகளில் இருந்தும் பிரதமர்கள் நம் நாட்டுக்கு விஜயம் செய்வது.

இது எல்லாம் சரி தானே.  அவர்கள் நாட்டில் தொழில்நுட்பம் இருக்கிறது. அதிக அளவில் உற்பத்தி நடக்கிறது.  எங்கேயாவது விற்க தானே வேண்டும்.  நம் நாட்டில் கொண்டு வந்து எதை வேண்டுமானாலும் வியாபாரம் செய்யலாம். விற்கலாம்.  அவற்றையெல்லாம் வாங்க தான் நாம் எவ்வளவு மக்கள் தொகை கொண்டுள்ளோம்.  அவர்கள் இந்திய பணத்தை அள்ளிக் கொண்டு செல்லலாம்.  வெள்ளையன் காலம் தொட்டு இது தானே நடக்கிறது. இப்போது ஒரு மாறுதல்.  நம் பிரதமரும் தொடர்ச்சியாக வெளிநாடுகளுக்கு பிரயாணம் செய்கிறார்.  ஆனால் நம் பொருட்களை உலக சந்தையில் விற்பதற்காக   அல்ல.   வெளிநாட்டுகாரர்களை கெஞ்சி கூத்தாடி நம் நாட்டுக்கு அழைத்து தொழில் செய்ய வைப்பதற்கு. யோசித்தால், நம்முடைய வளத்தையும், செல்வத்தையும் அவர்களுக்கே தாரை வார்த்து  கொடுக்க வேண்டியிருக்குமோ என்று அஞ்ச  வைக்கிறது இந்த பயணங்கள்.   பெரும்பாலும் வெளிநாடுகள் தங்களது மொக்கையான காலாவதியான தொழில்நுட்பங்களை கொண்டே இந்தியாவில் தொழிற்சாலைகள் அமைக்கிறார்கள்.  சில விதிவிலக்குகளை தவிர.  

இதையெல்லாம்  பார்க்கும் போது  ஒரு பழமொழி ஞாபகம் வருகிறது.  
எள்ளு எண்ணைக்காக காய்கிறது.  எலி புழுக்கை ஏன் சேர்ந்து காய்கிறது ???

ஆனால் நம் பிரதமர் வேறு ஏதாவது திட்டம் வைத்திருக்கிறாரோ என்னமோ? என் சிறிய அறிவுக்கு எட்டாத வாறு?




 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக