செவ்வாய், ஜனவரி 12, 2016

தனிமையில் நான் ....

போன பதிவில் ஜல்லிகட்டை நிறுத்த வேண்டும் என்று எழுதியது முழுக்க முழுக்க மனித உயிரிழப்பை தடுக்க வேண்டும் என்பதால் மட்டுமே....இதன் தொடர்ச்சியாக கூகிள் லில் தேடியதில் 2010 இல் இருந்து 2014 வரை 17 பேர் ஜல்லிக்கட்டில் இறந்திருக்கிறார்கள் என்று தெரிந்தது.  ஆனால் அதே சமயம் நிறைய தமிழர்கள் ஜல்லிக்கட்டை ஆதரிக்கிறார்கள் என்பதும் புரிந்தது.  ஆகையால், ஜல்லிகட்டை பாதுகாப்பாக விளையாடுவதற்கு வயிற்று கவசம், மார்பு கவசம் போன்றவற்றை பயன்படுத்தலாமே....என்று கோரிக்கை வைப்பது சரியென படுகிறது.  

சரி இன்றைய பதிவிற்கு (கவிதை) வருகிறேன்.  இந்த கவிதையை படித்து விட்டு என்னை ஒரு குடு குடு கிழவன் என்று நினைத்து விட வேண்டாம்.  ஒரு வயோதிகரை சிறிது காலமாக கவனித்து வந்ததில்  எழுதியது.  முதுமையில் தனிமை மிகவும் கொடியது.  ஒரு குழந்தையை அனாதையாக விட்டு விடுவது போன்றது.   அதுவும் கை நிறைய சம்பாதித்த ஒரு ஆண் கையாகாமல் போவது வேதனைக்குரியது.

தனிமையில் நான்....

காற்று வீசாத வெட்கையான மாலை 
மாடியில் நடக்கின்றேன்.
மனதிலும் புழுக்கம்.
நாலு வருஷம் ஆச்சு 
நல்ல செய்தி கேட்டு!!
சிரித்து வைத்த சிரிப்பெல்லாம் 
நினைத்து பார்த்து சிரிக்கிறேன்.
தனிமையில் சிரிக்கிறேனோ?
சுற்றி முற்றி பார்க்கிறேன் 
அக்கம் பக்கம் யாருமில்லை 
யார் வருகிறார் என்னை தேடி 
கீழே வீட்டுக்குள்ளே 
மனைவி உண்டு பிள்ளை உண்டு 
அவர்கள் மனசுக்கு உள்ளே மட்டும் 
நான் இல்லை மாடிக்கு வந்து விட்டேன்.
வீட்டின் உள்ள பொருள்களிலே 
கூட ஒன்றாய் நானானேன்.
அவற்றையெல்லாம் துடைச்சு வச்சவங்க 
என்னை மட்டும் பழசாய் விட்டு வச்சாங்க 
ரிட்டயர் ஆகி போனதினால் 
நான் மாடிக்கு வந்து விட்டேன்.

----



4 கருத்துகள்: