புதன், ஜனவரி 20, 2016

எங்களில் யாரது!!

பையன்களுக்கு மீசை அரும்பியதும் கண்களும் குறுகுறுக்க ஆரம்பித்து விடும். இளசுகள் மத்தியில் சொல்லுவார்கள்.  ஒன்னு விட மாட்டான்டா. குச்சிக்கு சுடிதார் போட்டாக்கூட போதும். வச்ச கண்ண எடுக்க மாட்டான்.   பள்ளிக்கூடம் விட்டாச்சுன்னா விளையாடுறது, பிறகு ஊர சுத்துரது (எந்த வகுப்பு என்று கண்டு பிடித்து கொள்ளுங்கள்).   ஊர சுத்தரதுன்னா எப்படி? இப்படி தான்.

எங்களில் யாரது ?? 

அப்போதெல்லாம் எங்களுக்கு 
மீசை அரும்பும் வயசு 
ஆசை அடங்காத மனசு 
கண்களில் காதல் நிரப்பிக் 
கொண்டு சில தேவதைகளின் 
தரிசனத்திற்காய் எங்கள் 
வீதிவலம் விளக்கு வைக்கும் வரை 
தொடர்ந்திருக்கும்.

வாசல் தெளிப்பவளாய்....
செடிக்கு நீர் வார்ப்பவளாய்....
எங்கோ செல்வதற்கு 
வெளிவருபவளாய் 
எப்படியோ எங்கள் 
தேவதைகள் முகம் காட்டும் - அந்த 
ஓரக்கண் பார்வையும் 
வாயோர புன்னகையும் எங்களில் 
யாரையோ ஒருவரை பார்த்து...

இன்று 
வெறிச்சோடி போன அதே தெருக்களில் 
எங்கள் தேவதைகளை தேடி 
பார்க்கிறேன்.
எங்கேனும் குழந்தையோடும் 
கணவனோடும் தென்படும் போது 
அன்றைய 
ஓரக்கண் பார்வையும் 
வாயோர புன்னகையும் மனதை 
வாட்டும் ஒரு 
பெருமூச்சோடு...

2 கருத்துகள்: