திங்கள், டிசம்பர் 21, 2015

சிம்பு + சினிமா + ஆபாசம்

இந்த பீப் பாடல் பற்றியும், சிம்பு அவர்களைப் பற்றியெல்லாம் எதற்கு எழுத வேண்டும் என்று தான் இருந்தேன்.  ஆனால் இந்த கெட்ட வார்த்தைகள் என்பதை நாம் அன்றாட வாழ்க்கையில் எப்படி எடுத்து கொள்கிறோம் என்று யோசித்தேன்.

சிறு வயதில் நண்பர்கள் மத்தியில் பழகும் பொது, பல கெட்ட வார்த்தைகள் சர்வ சாதரணமாக வாயில் வந்து விளையாடும்.  அந்த வார்த்தைகள் போட்டு பேசாதவனை பழம் என்று அழைத்து விடுவார்களோ என்று பயந்தே சிலர் கெட்ட வார்த்தைகளை பேசுவார்கள்.  அவற்றை வீட்டில் பேசாதவாறு ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்வோம்.  எனக்கு தெரிந்த நண்பன் ஒருவன் இப்படி தான் பேசுவான்.

"...த்தா.. அந்த  பொண்ணு..த்தா ..த்தா...  செம்ம figure மாமா....த்தா.. அவ மட்டும் கிடைச்சா...த்தா....அவ்ளோ தான் ..த்தா....."  
இங்கே நான் "...த்தா.." என்பதை சிறிதளவே போட்டு இருக்கிறேன்.  

இந்த "..த்தா." என்பதை பொண்ணுக்காக மட்டுமில்லை.  
"..த்தா.. எவ்வள்ளவோ படிச்சு பார்த்தேன் மச்சான்  ...த்தா....மண்டையில.. த்தா..ஏறவே மாட்டேங்குது ...." இப்படி கூட பயன்படுத்துவார்கள்.    ஆனால் இதை வீட்டில் அம்மா அப்பா தம்பி தங்கை முன்னாடி பேச மாட்டார்கள்.  ஏனென்றால் குடும்பம் என்றால் ஒரு கண்ணியம் உண்டு. பயமும் உண்டு.

சினிமாவில் பீப் சத்தம் பயன்படுத்தி திட்டுவது ரொம்ப நாள் தொட்டு நிலவி வருவது தான்.  சென்சர் போர்டுக்கு நன்றி.  தமிழில் வரும் சினிமா டூயட் பாடல்கள் எல்லாம் கெட்ட ரகம் தான்.  90% நல்ல ஹிட்டான டூயட் பாடல்கள் கூட ஒரே அர்த்தத்தை நோக்கி தான் இருக்கும்.  அதை பற்றி எல்லாம் விலாவரியாக விவாதிக்க முடியாது.  ஆனால் குழந்தைகள் கூட அவற்றை டி.வி நிகழிச்சிகளில் பாடலாம்.  தப்பில்லை.  தமிழர் பண்பாடு அப்படி. 

சிம்பு அவர்களின் அப்பா அவர்கள் சொல்லி இருக்கிறார்கள்.  யாரோ ஒருவன் சிம்பு அவர்களின் பாட்டை திருட்டுத்தனமாக you tube இல் வெளியிட்டு விட்டானாம்.  ஆக மொத்தம் மகன் இப்படி பட்டவர்த்தனமாக கெட்ட வார்த்தையை போட்டு எழுதியதை அவர் கண்டிக்கவில்லை.  அவர் குடும்பம் இதை எப்படி எடுத்துகொள்கிறதோ ? இந்த பாடலை பதிவு செய்ய குறைந்தது ஒரு பத்து பேர் கடும் உழைப்பை தந்து இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.  எதற்காக இந்த உழைப்பு?, எதற்காக இந்த பாடல் பதிவு என்பதெல்லாம் சிம்பு அவர்களுக்கே வெளிச்சம்.  ஒரு பொழுதுபோக்குக்கு என்று அவர் சொல்லி இருக்கிறார்.  அப்படி என்றால் அந்த பாடலை விவாதிப்போதோடு நிறுத்தி இருக்காலாமே.  எதற்கு பதிவு செய்ய வேண்டும்? 

கல்லூரியில் நடந்த சம்பவம் ஒன்று.  முதல் ஆண்டு மாணவன் ஒருவனை ragging செய்துகொண்டு இருந்தார்கள்.  ஏதாவது ஒரு கெட்ட  வார்த்தை சொல்ல சொன்னார்கள்.  எவ்வளவோ மிரட்டியும் அவன் ஒன்றும் சொல்ல மாட்டேன் எனக்கு தெரியாது என்று அழுதான்.  நீ ஏதாவது சொல்லியே ஆகா வேண்டும், இல்லை என்றால் அடி விழும் என்று மிரட்டியதும், அவன் சொன்ன கெட்ட வார்த்தை "ஆய் ".



   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக