சனி, ஜூன் 13, 2009

உன் பொய்யும் புரட்டும்...........

உன் பொய்யும் புரட்டும்
என்னிடம் எதை எதிர்பார்த்து?
என் உண்மை உன்னை
ஏன் அறைந்து விட்டது?
உன் புலம்பலும், பின் என்னிடமிருந்து
உன் விலகலும் உன்னை யாரோ
ஒரு முகம் தெரியாத அன்னியனாக்கிவிட்டது.
இப்போது உன்னிடம் நான்
வைத்திருக்கும் அன்பு முகம் தெரியாத
மனிதர்களிடம் நான் கொண்டிருக்கும்
அன்பு போன்றதே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக