சனி, ஜூன் 10, 2006

தமிழில் வலைபதிவது மிகவும் இனிமை. என் முதல் வலைபதிவை ஒரு கவிதையில் இருந்து தொடங்குகிறேன்.

நிலவு தந்த பதில்

அது ஒரு
இரவு நேர
இனிய பயணம்
பேருந்தின் ஜன்னலோரம்
பேச்சுக்கு துணையின்றி நான்.

கிராமத்து விளக்குகள்
முழித்திருக்க வில்லை -வானத்தில்
விழித்திருந்த நிலவே
விளக்கானது.

காற்றுக்கு ஏன் இவ்வளவு
வேகம்- என்
முகத்தை தகர்த்தெறிய
விர்ரென்று
வீசி அடித்தது.

வீசின காற்றின் ஊடே
வான் நோக்கி நிலவு
பார்த்திருந்தேன் -நிலவை
பார்த்ததும்- அதை
ஒன்று கேட்டு வைத்தேன்.

அன்று
என்னவளும் நானும்
பேசிய நேரத்தில் நீயும்
தூரத்தில் பார்த்திருந்தாய்
அல்லவா!
அந்த காட்சிகளை
திருப்பி தர முடியுமா?

நிலவு பதிலேதும் தரவில்லை - அமைதி
நிலவியதில் சற்றே
தூக்கத்தில் ஆழ்ந்தேன்.

தூக்கத்தில் ஒரு கனவு
கனவில் அன்று
என்னவளுடன் பேசிய
காட்சிகள் மறுபடியும்.
கனவு முடிந்து
நனவு வந்ததும்
நிணைத்துக் கொண்டேன்.
நிலவிடம் நான் கேட்ட கேள்விக்கு
நிலவு தந்த பதில் தான் கனவோ!


2 கருத்துகள்:

  1. பெயரில்லா7:33 PM

    It is really good. Can we expect some more kavidhaigal?

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லா6:19 AM

    Good Kavidai!!! Liked the way you have put your dream as a gift from moon..I havenot seen this part of Amuthan. may be we didn't give you enough private time for you (to think about your 'ennaval')when you were with us.
    Nice Kavidai!!!

    பதிலளிநீக்கு