இன்று (ஞாயிறு) காலை விஜய் டி.வியில், மதன் திரை பார்வையில் செல்வராகவனை பேட்டி கண்டார்கள் (புதுபேட்டைக்காக). பேட்டியில், புதுபேட்டை மக்களிடம் சரியாக போய் சேராததை போல் பேசினார் செல்வராகவன். (உண்மையில் புதுபேட்டை மெதுவாக பிக் அப் ஆவதாக கேள்வி!!). அதற்காக வருந்தியவர், இனி தமிழ் படங்கள் பண்ண போவதில்லை என்றும், தெலுகு, மற்றும் இந்தி படங்கள் பண்ண போவதாக தெரிவித்தார்.
ஆனானப்பட்ட பாலசந்தர், பாரதிராஜா, பாலுமகேந்திரா போன்றோரே தங்களது பிடித்த படங்களை மக்கள் ஏற்றுக்கொள்ளாததற்கு இத்தனை வருத்தப்பட்டதில்லை. தமிழ் சினிமாவை விட்டு விலகியதுமில்லை. நான் பார்த்த வரைக்கும் படம் நன்றாகவே இருந்தது. அத்தனை நடிகர்களை வைத்துக்கொண்டு கூலிப்படை ஆட்களை பற்றிய நிஜமான கதையை படமாக்க செல்வராகவனால் மட்டுமே முடியும். படம் மேலும் பெரிய ஹிட் ஆனால், அவர் தன் முடிவை மாற்றிக்கொள்வார் என்று நிணைக்கிறேன்.
(இந்திக்கு போனால் தானே தெரியும் நம்மவர்கள் அங்கே படும் அவதி என்னவென்று...)